Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு எதிர்ப்பில் ஒளிந்திருக்கும் சதிகள்

 முக நூலில் படித்த ஒரு கட்டுரை. இதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதால் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்திய அழகிகள் உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அழகு சாதனப் பொருட்களின் விற்பனைக்குமான இணைப்பு போல இதிலும் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி அடங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு  நியாயமாகவே தெரிகிறது. 

நாய்க்கடிக்கான மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூட முயற்சித்து  தனியாருக்கு ஒப்படைக்க முயற்சித்ததற்கும்  தெரு நாய்கள் மீது கருணை காட்டுவதற்கும் கூட தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.







யார் இந்த பீட்டா?
--------------------------
#‎PETA‬- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.

(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்...

35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!


இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!

கொம்பைப் பிடிக்கிறாய்!


கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!


அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!


'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!


பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?


அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.

அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.


நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?

பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும். 

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

மூன்றரை இலட்சம் கோடிகள்!

சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.
அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.

ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...

‪#‎Peta_fraud‬
நன்றி-இரா.குண அமுதன்.

10 comments:

  1. தெளிவாக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஒவ்வொன்றின் பின்னும் ஒரு சதிவலை உள்ளது போலத்தெரிகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான பதிவு....

    ReplyDelete
  4. பீட்டாவின் சதி அப்படி என்றால், தமிழர்களின் பாரம்பரிய வீரதீர விளையாட்டு என்று ஒரு காட்டுமிராண்டி விளையாட்டுக்கு தங்க முலாம் பூசுவது நியாயம் அற்றது. தமிழ் பேசுவோருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் பழைய காலங்களில் காட்டுமிராண்டிதனமான பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள் இருந்து தான் வந்துள்ளது.அதற்காக அதை இப்போதும் பெருமை பேசி பின்பற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பது நியாயம் இல்லை.
    ஒரு அரசியல் தலைவர் ஜல்லிக்கட்டை எதிர்பவர்கள் தமிழ் துரோகிகள் என்று அறிவித்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. யாணையை கோவிலில் சங்கலியால் கட்டி வைத்திருப்பது, தாட்டுகோலால் இடிப்பது, சித்திரவதை செய்வது ஆகும். இதுதான் காட்டு மிராண்டிதனம் ஆகும். கல்லைக்காண்பித்து இது கடவுள் என்பது காட்டு மிராண்டித்தனமாகும். விதவையை மறு திருமணம் செய்ய விடாமல் தடுப்பது முரட்டுத்தனமான காட்டு மிராண்டிதனமாகும். தன் எதிர்காலத்தை நட்சத்திரம் பார்த்து கணிப்பது எவ்வளவு பெரிய காட்டுமிராண்டித்தனம்! இதுபோன்ற எண்ணற்ற மூட நம்பிக்கைகள் இந்து மததில் மலிந்து கிடக்கின்றன. கடவுளுக்கு தட்சணையாக காசு கொடுப்பதால் கருணை கிடைக்கும் என்று சொல்லி, முடிகொடுத்தால் கருணை கிடைக்கும் என்று நம்ப வைத்து ஜனங்களை கொள்ளை அடிக்கிறாரகளே இதை எந்த காட்டு மிராண்டித்தனத்தில் சேர்ப்பது?
      மாட்டு விளையாட்டுக்காக காட்டு மிராண்டித்தனம் என்று தடை செய்வதை நியாயம் என்றால் மதம் செய்கிற மனுஷ வதைகளை காட்டு மிராண்டித்தனம் என்றால் என்ன தப்பு? இந்த மதங்களை தடை செய்தால் என்ன? இந்த விளையாட்டால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் மதத்தினால் எவ்வளவு பெரிய பாதிப்பு உண்டாகி இருக்கிறது? இது ஏன் நம் கண்களுக்கு தெரிய ம்றுக்கிறது?

      Delete
  5. மிக மிக உண்மைகள். 10/01/2016 நீயா நானாவில் இவர்களைப் போன்ற லூசுகள் வந்து பிதற்றியதையும் பார்த்திருப்பீர்கள். தமிழகத்தில் எத்தனை மாடுகள் இருக்கென்று தெரியாத ஒருவர் மாட்டு வதை எனக் கூச்சலிட்டார்.
    நம் நாட்டின் காலநிலைக்கு வாழமுடியாத நாய்,பூனை,பறவை என பலவற்றைச் செல்லப்பிராணியாக வதைப்போரை இவர்கள் ஏதுமே கேட்பதில்லை.
    இந்த பீற்றா காரருக்கு "இருட்டடி" கொடுக்க ஆள் இல்லையா?

    ReplyDelete
  6. Yean jallikatta niruthittaa kaalai maadukku theevanam poda manasu varaadha?

    ReplyDelete
  7. உன்மைதான் நண்பர் ராமன் .
    மேலைநாடுகளின் இப்படிப்பட்ட பல நிறுவனங்களின் பின்னணிகள் பலரையும் அதிர வைக்க கூடியவை ,தங்கள் வியாபார நலனுக்காக மூன்றாம் உலக நாடுகளில் பல சித்து விளையாட்டுகளில் ஈடுபடுவது வழமை .இதுவும் அதில் ஒன்றே .உங்கள் பணி தொடரட்டும் எண்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு .

    ReplyDelete
  8. சிட்டுக்குருவிகள் எங்கே போயின ...?

    ReplyDelete