Wednesday, May 8, 2013

பாஜக கொடுத்த லட்டு, மக்கள் பெற்ற அல்வா

கர்னாடக மாநில தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியும் வருத்தமும்
ஒரு சேர தருகிறது.

ஹொகனேக்கலில் பரிசல் சவாரி போய் உணர்வுகளை தூண்டி
ஆட்சிக்கு வந்த பாஜக வீழ்ந்து விட்டது. ரெட்டி ப்ரதர்ஸ் ஊழல்
தொடங்கி யெடீயூரப்பா ஊழல்கள், சட்டசபையில் ஆபாசப்படம்
பார்த்த மந்திரிக்கள், நண்பனின் மனைவியை பாலியல்
வன்கொடுமை செய்த அமைச்சர், காங்கிரஸ் கலாச்சாரப்படி
முதலமைச்சர் மியூசிக்கல் நாற்காலி என்று பாஜக ஆட்சி 
நாற்றமடித்துக் கொண்டுதான் இருந்தது.

ஆகவே அது போனது மகிழ்ச்சியானதுதான். நரேந்திர மோடி
வந்தால் வாக்கு வரும் என்பது மாயையாகிப் போனது கூடுதல்
மகிழ்ச்சி.

ஆனால் பொய்மையும் ஊழலும் மோசடியும் வஞ்சகமும்
தேசத் துரோகமும் நிறைந்த காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு
வந்தது வருத்தமான ஒன்று. 

தங்களின் கேவலமான கொள்கைகளை மக்கள் ஆதரிக்கிறார்கள்,
நாங்கள்தான் மத்தியிலும் ஆட்சிக்கு வருவோம் என்று 
காங்கிரஸ் ஊதுகுழல்களின் சத்தம் அதிகமாக வரும் என்பது
கூடுதல் வருத்தம். தற்குறி இளவரசனுக்கு முடி சூட்டுவதற்கு
இதுதான் சரியான நேரம் என்று எடுபிடிகள் பேச ஆரம்பித்து
விடுவார்கள்.

பாஜக காங்கிரஸ் கட்சிக்கு லட்டு மாதிரி ஆட்சியை 
தூக்கிக் கொடுத்து விட்டது. 

பாவம் மக்கள், அவர்களுக்கு கிடைக்கப் போவது என்னவோ
அல்வா மட்டுமே.
 

1 comment:

  1. ராமன் அவர்களே! இந்தியாவில் கங்கிரஸ் அல்லது பா.ஜ.க தவிர வேறு அரசியலே இல்லது பொன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்களே ! அது மிகவும் ஆபத்தானது ! கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் நமக்கு ! இமைப் பொழுதும் சோராதிருக்க வேண்டிய தருணமும் கூட !---கஸ்யபன்!

    ReplyDelete