Monday, May 20, 2013

வெட்டி ஆம்பளைங்களுக்கு சவுக்கடி

சென்னை உயர்நீதி மன்றம் ஒரு விவாகரத்து வழக்கில் சூப்பர்
தீர்ப்பு அளித்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு
செல்பவர்கள்.

சோம்பேறியான கணவன், வேலையை ராஜினாமா செய்து விட்டு
வீட்டில் சொகுசாக இருக்கத் தொடங்கினான். மனைவியை 
தந்தை வீட்டிற்கு அனுப்பி ஒரு லட்ச ரூபாய் கொண்டு வரச்சொல்லி
கொடுமைப் படுத்தினான். மனைவி மறுக்கவே அடி,உதை என்று
கொடுமைகள் வேறு. 

வேறு வழியே இல்லாத மனைவி, விவாகரத்து கேட்க இந்த
மனிதன் ஜீவனாம்சம் கேட்கிறான். மாவட்ட நீதிமன்றம் அதனை
மறுத்தது. இவன் உயர் நீதிமன்றம் செல்ல அங்கேயும் அவன் மனு
நிராகரிக்கப்பட்டது.

எந்த குறைபாடும் இல்லாமல் வேலைக்கு போகாமல் சோம்பிக்
கிடப்பவர்களுக்கு உழைத்து சிரமப்படும் மனைவி ஜீவனாம்சம்
எதுவும் தர வேண்டியதில்லை. மனைவி வேலைக்கு போய்
சம்பாதிக்கிற காரணத்தினாலேயே ஜீவனாம்சம் கேட்க இது
போன்ற பேர்வழிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று
சவுக்கடி கொடுத்துள்ளது. 

விவாகரத்து செய்வதால் ஜீவனாம்சம் தரவேண்டியதில்லை
என்று இந்த தீர்ப்பு சொல்கிறது.

ஆனால் வெட்டியாக இருந்து கொண்டு மனைவியை வெட்டி
அதிகாரம் செய்யும் சோம்பேறி ஆண்களுக்கு சோறு போட
வேண்டிய அவசியம் கூட இல்லை என்று ஒரு தீர்ப்பு வந்தால்
இங்கே பலரும் பட்டினிதான் கிடக்க வேண்டும்.

அதுவும் கூட தேவைதான்

No comments:

Post a Comment