Saturday, May 11, 2013

இப்படி ஒரு விளம்பரம் அவசியமா?

எங்கள் பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடை லோக்கல்
சேனல்களில் ஒரு விளம்பரம் செய்து வருகிறது.

ஐந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு  தள்ளுபடி
விற்பனை என்று.

இதிலென்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா?

அந்த கடை திறந்து இரண்டு வருடங்கள் மட்டுமே
ஆகிறது. ஆனால் விளம்பரம் செய்வது ஐந்தாவது 
ஆண்டு என்று.

ஒரு சின்ன விஷயத்திற்கே இப்படி அபாண்டமாக 
பொய் சொல்பவர்களின் வணிகம் மட்டும் எப்படி
நேர்மையாக இருக்கும்?

ஏன் இப்படி கதை விடுகிறார்கள் என்ற கேள்வியை
இன்னும் சிலர் கூட கேட்டார்கள். 

தாங்கள் அனுபவசாலிகள் என்று காண்பித்துக் கொள்ள
வெளியிட்ட  விளம்பரம் அதன் நம்பகத்தன்மையையும்
வணிகத்தையும் பாழடித்து விடும் என்று புரியவில்லை
போலும்!
 

2 comments:

  1. தப்பே இல்லை ... காந்திக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவர்கள் எல்லாம் காந்தி பெயரை வைத்து மக்களை எமற்றவில்லையா... அதே போல தான் இதுவும் ...

    ReplyDelete
  2. எல்லாமே வியாபாரம்னு ஆகி போச்சு யாரன்னு குறை சொல்லறது பாஸ்

    ReplyDelete