Sunday, October 29, 2023

இந்திய அரசின் துரோகம் ...

 


பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் அராஜக தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு, அத்து மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஓடி ஓளிந்திருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் பற்றி தீர்மானத்தில் எதுவும் இல்லாததால் வாக்களிக்கவில்லை என்றொரு விளக்கம் வேறு கொடுத்துள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலா இஸ்ரேலின் அராஜகத்திற்கு துவக்கப்புள்ளி?

பல்லாண்டுகளாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிற அராஜகம், இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள், பாலஸ்தீனக்குழந்தைகள், அழிக்கப்பட்ட சொத்துக்கள் ஆகியவை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஹமாஸின் மீது மட்டும் பழி சொல்வது அயோக்கியத்தனமானது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்பது என்ற இந்தியாவின் பாரம்பரியத்தை குழி தோண்டி புதைக்க ஆரம்பித்தவர் வாஜ்பாய்.

இப்போது அதனை டிமோ செய்து முடித்து விட்டார்.

இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறார். அனைவரையும் உளவு செய்வதற்கான கருவிகள் வாங்குகிறார். கோடிக்கணக்கான ரூபாய் இந்திய கஜானாவிலிருந்து போகிறது. அதிலே எத்தனை சதவிகிதம் தரகர்கள் மூலம் பாஜகவிற்கு வருகிறதோ!

அந்த எலும்புத்துண்டுகளுக்காக இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கும் உலக அமைதிக்கும் செய்துள்ள துரோகம் இந்திய நாட்டிற்குத்தான் களங்கம் . .. 

No comments:

Post a Comment