Wednesday, October 18, 2023

ஜெய்ஸ்ரீராம் - யாரின் முழக்கம்?

 




பாகிஸ்தான் போட்டியின் போது அகமதாபாத் வெறியர்கள் பாகிஸ்தான் வீரர்களை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டார்கள். அன்று தொடங்கிய வாத பிரதிவாதம் இன்னும் தொடர்கிறது.

கொலைகாரர்கள் எழுப்பிய முழக்கம்தான் இது.

கைது செய்யப்பட்ட திருடர்கள் எழுப்பிய முழக்கம்தான் இது.

அடுத்தவன் குடும்பத்தை பிரிக்க அடியாட்களாய் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது எழுப்பிய முழக்கம் இது.

பாலியல் குற்றவாளிகள் எழுப்பிய முழக்கம்தான் இது.

பக்தர்கள் எழுப்பினால் பிரச்சினை இல்லை.

ஆனால் இந்த பாவிகள் எழுப்புவதில் உள்நோக்கம் இருக்கிறது. கலவரத்தை தூண்டும் கொடூரம் இருக்கிறது. 

சங்கிகள் எழுப்பும் "ஜெய்ஸ்ரீராம்"  நிச்சயம் ஆபத்தானதுதான்.

சங்கிகள் முன்பு எழுப்பிய முழக்கம் "ஓம் காளி, ஜெய் காளி"

கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலில் நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் எழுப்பிய முழக்கம் அது.

சங்கிகளும் நர வேட்டை ஆட்டும் காபாலிகர் கூட்டம்தான். அவர்களின் 

பழைய முழக்கம் "ஓம் காளி, ஜெய் காளி"

புதிய முழக்கம் "ஜெய்ஸ்ரீராம்"

அவர்களின் அரசியலுக்கு ராமர் காலாவதியாகிப் போனால் வேறு ஒரு முழக்கத்தோடு கூட வருவார்கள். எல்லாமே வன்முறையை அடிப்படையாகக் கொண்டதுதான்.

உண்மையான பக்தர்கள் சங்கிகள் மீதுதான் கோபப்பட வேண்டும். அவர்களின் அராஜகத்தை எதிர்ப்பவர்கள் மீதல்ல . . .


No comments:

Post a Comment