Tuesday, October 31, 2023

கோபம் வரவழைக்கும் காமெடி

 


மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு காமெடி செய்துள்ளார். சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.


தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை நேர்மையான முறையில் வழங்கப்படுகிறதாம். சுத்தமான பணமாம்.

யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று அறிய தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் வரம்பில் கொண்டு வர வேண்டும் என்ற வழக்கில்

"மக்கள் எல்லாமும் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் அவசியமில்லை"

என்று ஆணவமாக பேசிய பின்புதான் இந்த காமெடி வஜனத்தை பேசி உள்ளார்.

பாஜகவுக்கு எலும்புத்துண்டுகளை வீசும் முதலாளிகளைப் பற்றி சொல்ல மாட்டோம் என்று வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக ஏன் இந்த கோபமூட்டும் காமெடி மிஸ்டர் அட்டர்னி ஜெனரல்?

பிஎம் கேர்ஸ் நிதி பற்றியே சொல்ல மறுப்பவர்களா, தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறப்பார்கள்!

ஆனாலும் சில முட்டாள்கள் பாஜகவை நேர்மையான கட்சி என்று இன்னும் ந்ம்பிக் கொண்டிருக்கிறார்கள். 


No comments:

Post a Comment