Thursday, October 12, 2023

விளக்கம் சொல்வீங்களா தமிழிசை?

 


புதுவை அரசின் ஒரே பெண் அமைச்சர் சந்திரா பிரியங்கா தன் அமைச்சர் பதவியை தம் மீது நிகழ்த்தப்படும் ஜாதிய, பாலின பாகுபாடு காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

அக்கடிதம் கீழே


இதற்கு தமிழிசை எதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்பீர்கள்!

புதுவையில் முதல்வர், சபாநாயகர், துணை நிலை ஆளுனர் என்று மூன்று அதிகார மையங்கள் உண்டு என்றும் அதிலே சக்தி மிக்கவர் தமிழிசைதான் என்று எங்கள் புதுவை தோழர்கள் சொல்வார்கள்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஆட்டுக்காரன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களில் கூட இவர் ஆளுனர் என்ற பொறுப்பை மறந்து பேசுவார்.

அதனால் தலித் என்ற காரணத்தாலும் பெண் என்ற காரணத்தாலும் தனக்கு பிரச்சினை வந்தது என்று அமைச்சர் சொன்னதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழிசை அம்மையாருக்கே அதிகம் உண்டு,

சொல்வீர்களா? 

1 comment:

  1. வளர்ப்பு ( RSS ) அப்படி!
    இதற்கெல்லாம் இசைபாடுமா?

    ReplyDelete