Wednesday, October 18, 2023

மதிமாறன் எனும் கோமாளி . . .

 


இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் இந்திய அளவில் புகழ் பெற்றதற்கு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரைதான் காரணம்.

அம்மாநாட்டை நடத்தியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

பவா செல்லதுரை எனும் பதிப்பக உரிமையாளர், எந்த காலத்திலோ தமுஎகச அமைப்பில் இருந்தார். தமுஎகச அமைப்பை புளிச்ச மாவு ஆஜான் அவரை முன்னிறுத்தி சிறுமைப்படுத்தும் போது கள்ள மவுனம் சாதிக்கிறார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு,

எப்படி ஜெயமோகன் புளிச்ச மாவின் மூலம் புகழ் பெற்றாரோ, அது போல தோசை குறித்த ஆய்வின் மூலம் புகழ் பெற்றவர் மதி(யற்ற)மாறன். அவர் ஒரு பதிவு போடுகிறார்.


தமுஎகச வுக்கு சம்பந்தமில்லாத தனி நபரின் செயலை வைத்து தமுஎகச எனும் அமைப்பின் மீது வன்மத்தை கொட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அந்தாள் ஒரு கோமாளி என்று பலரும் சொல்வதும் சரிதான் ..

என்ன இவர் தன்னை திக, திமுக வுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அந்த அமைப்புக்களுக்குத்தான் இழிவு தேடிக் கொள்கிறார்.

அய்யா மதி கெட்ட மாறா! "நாங்களாவது சனாதன எதிர்ப்பு மாநாடுதான் நடத்தினோம். நீங்கள்தான் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறீர்கள்" என்று திக தலைவர் ஆசிரியர் கே.வீரமணி அவர்கள் தமுஎகச வை பாராட்டியது உமக்கு தெரியுமா?

தெரிந்துதான் வயிற்றெரிச்சலில் உளரினீரா?

அடுத்த முறையாவது மதியோடு எழுத முயற்சிக்கவும்...

No comments:

Post a Comment