Saturday, October 21, 2023

பொட்டுக்கான புலம்பலின் பின்னே . .

 


கஜானா ஜ்வெல்லரியின் பொட்டு வைக்காத பெண்ணின் விளம்பரத்தைக் கண்டு புலம்பிய பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரு எனும் சங்கி அடுத்து நல்லி விளம்பரத்தைப் பார்த்து புலம்பியுள்ளது.

அந்த ட்வீட்டில் சிலர் போட்ட கமெண்ட்தான் மேலே படமாக உள்ளது.

அது நக்கலுக்காக போடப்பட்டது.

ஆனால் இந்த சங்கி விதைப்பது ஒற்றைக் கலாச்சார சிந்தனையைத்தான். பெண் என்றால் பொட்டு வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்த விழைகிறான். பொட்டு இல்லாமல் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், அவர்களை அடையாளப்படுத்தி விளம்பரம் கூடாது என்ற சிந்தனையை வெளிப்படுத்துகிறான்.விதவைகள் என்றால் பொட்டு வைக்கக்கூடாது என்ற சங்கிகளின் பிற்போக்குத்தனமான சிந்தனையையும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி அழைக்கப்படாததையும் இணைத்துப் பாருங்கள்.

"பொட்டு பொட்டு" என்று சேகர் புலம்புவதின் பின்னணி இந்த கீழ்த்தர எண்ணம்தான். 


No comments:

Post a Comment