Friday, April 5, 2019

பாகிஸ்தான் ப்ளேனை சுட்டதும் பொய்யா மோடி?





புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாலகோட் பகுதியில் துல்லிய தாக்குதல் நடத்தியதாகச் சொன்ன மோடி நானூறு தீவிரவாதிகள் இறந்து போனதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் மட்டும் டென்ஷனாகி விடுவார்.

ஆமாம்.

ஆதாரம் இருந்தால்தானே,
நானூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருந்தால்தானே

அவரால் ஆதாரத்தை அளித்திருக்க முடியும்!

அதனால்தான் அவர் தன் இலக்கை விண்வெளிக்கு மாற்றினார். ஆனால் பாவம் அதிலும் அவருக்கு மூக்குடைப்புதான் மிச்சம்

பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்தியாவிற்குள் ஊடுறுவியதாகவும் அவர்களை இந்திய விமானப் படை துரத்திக் கொண்டு சென்று தாக்கியதில் பாகிஸ்தானின் ஒரு F 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் சொன்னார்கள்.

பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைந்ததும் இந்திய விமானங்கள் துரத்திக் கொண்டு சென்றதிலும் எந்த கேள்வியும் இல்லை. அப்படி போன ஒரு விமானத்தின் விமானிதான் அபிநந்தன்.

இப்போது வந்துள்ள தகவல்தான் பாகிஸ்தானின்  F 16 விமானத்தை வீழ்த்தியதாக சொல்லப்பட்டது வழக்கமான மோடி உடான்ஸ் என்று அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு F 16 விமானங்களை வழங்கியது அமெரிக்கா. அமெரிக்கா பாகிஸ்தானின் உடன்பாட்டின் படி அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் வசம் உள்ள F 16 விமானங்களை சோதனையிடலாம்.

இந்த சம்பவத்திற்குப் பின்பு கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாகிஸ்தான் சென்று சோதனையிட்டுள்ளார்கள். அனைத்து F 16 விமானங்களும் எந்த சேதமும் இல்லாமல் பத்திரமாக முழுமையாக இருந்துள்ளது.

அப்படியென்றால் இந்தியாவால் வீழ்த்தப்பட்ட விமானம்?

மகாபாரதத்தில் ஜராசந்தனை இரண்டாக கிழித்தாலும் கிழிக்கப்பட்ட இரண்டு பாகங்களும் மீண்டும் ஒட்டிக் கொண்டு உயிர் பெறுவதாக காட்சி வரும். அது போல ஏதாவது அதிசய சக்தி அந்த விமானத்திற்கும் இருந்திருக்குமோ?

பாவம் மோடியின் பொய்கள் எல்லாவற்றுக்குமே அல்பாயுசுதான் போல. .

5 comments:

  1. கெட்டிக்காரன் புளுகுக்கே ஆயுள் 8 நாள்தான்..

    ReplyDelete
  2. இதில் அமெரிக்காவும் இன்வால்வ் ஆவதால் வாயே திறக்க மாட்டார்கள்

    ReplyDelete
  3. எல்லாமே பொய்யா கோப்பால்?

    ReplyDelete
  4. பாக்கியின் புழுகு தான் இன்த கம்முனிஸ்ட் கம்முனாட்டி பிடித்து கொன்டு தொன்க்குவது.....மோடியை எதிர்ப்பதர்காக..பாக்கிகே கூட்டிகொடுக்கும் இன்த மாமாவின் வேஸம் எல்லாருக்கும் புரின்திரிருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. காலங்காத்தாலே காமெடி செய்யாதடா நாயே! அரை வேக்காடு மாதிரி நடிக்காதெ! காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் உன் தொழில். உன் கூட்டாளிகளின் தொழில்

      Delete