Thursday, April 18, 2019

“குடி” மக்கள் கவலையே வேற



Image result for liquor glass 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து என அறிவிக்கப்பட்ட நேற்று முன் தினம், காய்கறி வாங்க இரவு கடைக்குச் சென்ற போது அங்கே காதில் விழுந்த மூன்று உரையாடல்கள் இங்கே

உரையாடல் 1

கேள்வி : அப்போ நம்ம ஏரியால டாஸ்மாக் மூட மாட்டாங்க இல்லையா?

பதில் :  ஆமாப்பா, ஸ்டாக் வாங்கி வச்சுக்க வேணாம்

உரையாடல்  2

கேள்வி   : எலக்சன் கிடையாதுன்னா இலை பார்ட்டிங்க கொடுத்த காசை திருப்பிக் குடுன்னு கேப்பாங்களா?

பதில்  : அதெப்படி கேப்பாங்க? நாம என்ன வோட்டு போடாம ஏமாத்தினாமோ! அப்படியே கேட்டால் டாஸ்மாக்கில வாங்கிக்கோ, பிரியாணி கடையில வாங்கிக்கோன்னு சொல்லிட வேண்டியதுதான்.

உரையாடல் 3

கேள்வி : இன்னொரு தபா எலக்சன் வரும் போது மறுபடியும் காசு கொடுப்பாங்களா?

பதில் : அதெப்படி குடுக்காம இருக்க முடியும்? மத்த செலவெல்லாம் மறுபடியும் செய்வாங்க இல்லை, அது மாதிரிதான்.  கண்டிப்பா குடுத்துத்தான் ஆவனும்.

டாஸ்மாக் குடி மகன் களின் உலகமே வேறு. அவர்களின் கவலையே வேறு.

No comments:

Post a Comment