Wednesday, April 17, 2019

தூத்துக்குடி கொலைகாரர்களை தூக்கி எறிவோம்.





கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக யாரும் எப்போதும் போராடக்கூடாது என்பதற்காக நடந்த படுகொலைதான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள்.

ஸ்டெரிலைட் என்று மட்டுமல்லாமல் நாளை எந்த ஒரு கார்ப்பரேட் பகாசுர நிறுவனத்தின் உயிர் குடிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக யாராவது போராட முன் வந்தால் அவர்களின் உயிரைப் பறிக்கவும் அரசு தயங்காது என்பதுதான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் மூலம் மக்களுக்கு மோடி அரசு தெரிவித்த தெளிவான செய்தி.

பதிமூன்று உயிர்கள் கொல்லப்பட்ட பின்பும் ஸ்டெரிலைட் ஆலை மீண்டும் இயங்கக்கூடிய விதத்தில் பசுமைத் தீர்ப்பாணையம் ஆணை கொடுக்கிறது என்றால் அதிலிருந்தே மோடிக்கும் கார்ப்பரேட் கேடிகளுக்குமான நெருக்கத்தை உணரலாம்.

தூத்துக்குடியில் தமிழிசையை நிறுத்தியது கூட பாஜக வின் ஆணவத்தை வெளிப்படுத்தும் ஒரு செயலே.






1 comment:

  1. இதே வேதாந்தாவில் ப சி ஒரு டைரக்டர் ஆக இருந்தார் என்பது தெரியுமா?

    ReplyDelete