Friday, April 26, 2019

வெடிகுண்டு சாமியாருக்கு புற்று நோய் என்பதும் ???????



கோமியத்தின் மூலம் தன் மார்பகப் புற்று நோய் குணமானது என்று வெடிகுண்டு சாமியார் சாத்வி பிராக்யா தாகூர் உடான்ஸ் விட்டது பற்றி முந்தைய பதிவொன்றில் எழுதியிருந்தேன்.

அதைப் படித்து விட்டு ஒரு தோழர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு ஒரு செய்தியை படிக்கச் சொன்னார். 

வெடிகுண்டு சாமியாருக்கு சோதனை செய்த மருத்துவர்களின் அறிக்கை அது.

மார்பக புற்று நோயை கோமியம் மூலம் குணமாக்கிக் கொண்டதாக வெடிகுண்டு சாமியார் ஆனால் மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் புற்று நோய் பிரிவு மருத்துவர்கள் கொடுத்த அறிக்கை  சொல்வது வேறு விதமானது. மோடியைப் போலவே மோடி நிறுத்தும் வேட்பாளர்களும் மோசடிப் பேர்வழிகள் என்பதைத்தான் அந்த அறிக்கை நிரூபிக்கிறது,

வெடிகுண்டு சாமியாருக்கு அப்படியெல்லாம் எந்த நோயும் கிடையாதாம். மார்பகப் புற்று நோய் கிடையவே கிடையாதாம். மார்பகப் புற்று நோய்க்காக எடுத்த அனைத்து சோதனை முடிவுகளும் அவருக்கு அந்த நோய் இல்லை என்பதையே  தெரிவித்துள்ளன.

இல்லாத நோய் எப்படியம்மா கோமியத்தின் மூலம் குணமானது என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும்

மார்பகப் புற்று நோய் என்று நீதிமன்றத்திற்கு மருத்துவச் சான்றிதழ் கொடுத்தது யார்?

அந்த போலிச் சான்றிதழ் அடிப்படையில்தான் அவருக்கு பிணையும் கிடைத்தது. விசாரணையில் பங்கேற்காமல் இருக்க விலக்கும் அளிக்கப் பட்டது.

இப்போது நீதிமன்றத்தின் முன்பாக இரண்டு பணிகள் உள்ளது.

போலிச்சான்றிதழ் மூலம் பெற்ற பிணையையும் விலக்கையும் ரத்து செய்து வெடிகுண்டு சாமியாரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும்.

போலிச்சான்றிதழ் அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து அவரையும் சிறைக்குள் தள்ள வேண்டும்.

செய்வார்களா?



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete