Sunday, April 21, 2019

மதுரையில் தொடங்குதா மோசடி ஆட்டம்?


மூன்றடுக்கு பாதுகாப்பு. நூற்றுக்கணக்கான போலீசார், மத்திய பாதுகாப்புப் படை, சிசி டிவி காமெராக்கள் கண்காணிப்பு -

இதெல்லாம் ஜூம்லா வேலைதான் என்பதை மதுரை சம்பவம் உணர்த்தியுள்ளது.

இத்தனையையும் மீறி மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறைக்கு ஒருவரால் எந்த அனுமதிக் கடிதமும் இல்லாமல் செல்ல முடிகிறது>

ஆவணங்களை வெளியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்க முடிகிறது?

மாவட்ட ஆட்சியர், பாதுகாப்புப் படை, போலீசார் எல்லோரும் கூட்டுக் களவாணிகளா?

தோல்வி பயத்தால் மோசடி ஆட்டத்தை மதுரையில் தொடங்கி உள்ளார்களா?

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிற கதையாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் விழிப்புடன் இல்லையென்றால் இந்த பிராடு வேலையை எல்லா தொகுதிகளிலும் செய்வார்கள்.

ஆம்

ஆட்சியை தக்க வைக்க எந்த அளவும் கீழிறங்க தயங்காத வெட்கம் கெட்ட கிரிமினல் கூட்டமல்லவா இது!


சம்பவம் பற்றி மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் தோழர் சு.வெ வின் பேட்டி கீழே உள்ளது.



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete