Sunday, July 15, 2018

மோடி முஸ்லீம் பெண்களின் காவலரா?



காங்கிரஸ் கட்சி முஸ்லீம் பெண்களுக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்துள்ள 

நரேந்திர மோடி முஸ்லீம் பெண்களின் காவலரா?

குஜராத் கலவரத்தில் எண்ணற்ற முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்ய்க் காரணம் யார்?

கலவரத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்கள் விதவையாகி வாழ்க்கையை தொலைக்க யார் காரணம்?

சரிகிற செல்வாக்கை சமாளிக்க இஷ்ரத் ஜஹான் எனும் முஸ்லீம் பெண்ணை போலி எண்கவுண்டரில் கொன்றது யார்?

குஜராத் அகதிகள் முகாமை குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று சொல்லி முஸ்லீம் பெண்களை இழிவு படுத்தியது யார்?

ஆசிபா வழக்கில் குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வது யார்?

இவ்வளவு மோசமான ஒரு குற்றவாளி அடுத்தவர்களை இழிவு படுத்துவது மிகவும் கேவலம்.

எல்லாம் சரி,

முஸ்லீம் பெண்களுக்காக இவ்வளவு கவலைப்படும் கேடு கெட்ட  மோடி, முதலில் தான் தாலி கட்டி பின்பு கை விட்டு விட்ட தனது மனைவி பற்றி கவலைப்படட்டும்.

அவரோடு வாழட்டும்

அல்லது

அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்யட்டும்.

அதன் பின்பு 

மற்ற பெண்கள் குறித்து கவலைப்படட்டும் . . .

No comments:

Post a Comment