Tuesday, July 10, 2018

ஆஸிபா வழக்கு - எஸ்கேப்பிற்கா மறுப்பு????


காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் சின்னஞ்சிறு மலர் ஆஸிபாவை மதவெறிக் குண்டர்கள் சிதைத்த கொடூரத்தையும் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என காவிக்கூட்டம் தேசியக் கொடியோடு ஊர்வலம் போனதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

அந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடைபெற்று வருகிறது. 

குற்றவாளிகள் ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்காக கத்துவாவிலிருந்து குர்தாஸ்பூருக்கு கூட்டி வர வேண்டியுள்ளது. இதற்கான நடைமுறைகளால் வழக்கு விசாரணைக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே அவர்களை குர்தாஸ்பூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என ஆஸிபா குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநில அரசு வழக்கறிஞர் இதனை ஏற்றுக் கொள்ள மத்தியரசின் உதவி தலைமை வழக்கறிஞர் மட்டும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஏன் சார்?

கத்துவாவிலிருந்து குர்தாஸ்பூர் வருகிற வழியில் குற்றவாளிகளை தப்ப வைக்கிற திட்டம் ஏதாவது வைத்திருந்தீர்களா?

சட்டபூர்வமாக விடுவிக்க முடியாத காரணத்தில் இப்படிப்பட்ட வேலைகள் செய்வது ஒன்றும் பாஜக ஆட்களுக்கு புதிதல்லவே! 

கிரிமினல்களால் கிரிமினல்களுக்காக நடத்தப்படும் கிரிமினல் கட்சிதானே பாஜக!!!!

No comments:

Post a Comment