Sunday, July 29, 2018

அறிவாளை தூக்க வைக்காதீங்கடா . . .


நாம் அமைதியாக, ஆக்க பூர்வமான பணிகளை செய்ய வேண்டும் என நினைத்திருப்போம்.  ஆனால் உருப்படியான வேலை இல்லாத வெட்டி ஜென்மங்களான, அடுத்தவர்களை எப்படி கெடுக்கலாம் என்று டிவி சீரியல் வில்லிகள் போலவே எப்போதும் திட்டமிட்டுக் கொண்டே இருக்கிற சங்கிகள், நம்மை வெறுப்பேற்ற ஏதாவது பேசுவார்கள், உளருவார்கள். கடுப்பாகிற நம்மையும் அவர்களைப் போலவே  மோசமானவர்களாக மாற்ற நினைக்கிற கேவலமான உத்தி அது. 

அப்படிப்பட்ட ஒரு மோசமான மனிதன்தான் மேலே படத்தில் இருக்கிற பசனகவுடா என்ற கர்னாடக மாநில பாஜக எம்.எல்.ஏ. அந்தாள் உள்துறை அமைச்சராக இருந்தால் போலீஸை விட்டு அறிவுஜீவிகள் அனைவரையும் சுட்டுக் கொல்லச் சொல்லி விடுவாராம். தோழர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்த மனிதனை தூக்கி உள்ளே வைக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 

இந்த  சங்கிகள் எல்லாம் அவர்கள் பாணியிலேயே நம்மையும் எதிர்வினையாற்ற வைத்து நம்மையும் அவர்களைப் போலவே மட்டமானவர்களாக  மாற்றி, நம்முடைய கவனத்தை முக்கியமான பணிகளிலிருந்து திசை திருப்பி, நேரத்தை விரயம் செய்ய வைப்பதற்காக விரிக்கிற சதி வலை என்று நன்றாக புரிகிறது. 

அதனால்தான் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது.

பணிவோடு அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது...

எங்களையும் அறிவாளை தூக்க வைக்காதீங்கடா . . .


2 comments:

  1. அருமை இவர்களுக்கு அறிவு என்பது கிடையாது

    ReplyDelete
  2. அரிவாள்.

    ReplyDelete