Monday, July 2, 2018

போலிச் சிலைகள் - வொய் சைலண்ட் சங்கிஸ்?


கள்ள மௌனம் ஏன் சங்கிகளே?



தமிழகக் கோயில்களில் இருப்பவற்றில் மூவாயிரம் சிலைகள் போலிச்சிலைகள் என்று சிலைக்கடத்தல் பிரிவு காவல் அதிகாரி பொன்.மாணிக்கவேல் சொல்கிறார்.

அதே போல அவரை ரயில்வே போலீஸிற்கு மாற்றுகிறார்கள். சிலைத் திருட்டுக்கள் குறித்த புலனாய்வை முடக்கும் சதி இது. 

அறநிலையத் துறையிடமிருந்து இந்து கோயில்களை மீட்க வேண்டும் என்று எப்போதும் குதித்துக் கொண்டிருக்கிற காவிக் கூட்ட சங்கிகள் இந்த தகவல் தெரிந்தும் ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்?

அதிலும் கோயில்கள் மீட்பு மாநாடுகளை நடத்திக் கொண்டு ஓவராக பொங்கி எழும் எச்.ராசா ஏன் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை?

இந்த சிலை கடத்தல் விவகாரங்களில் ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் செய்தி வருகிறது.

தமிழகத்தில் சமூக விரோதிகள் பெருகி விட்டார்கள் என்று சவுண்ட் விடும் பொன்னார் எங்கே போனார்?

அந்த அகில இந்தியக் கட்சி காங்கிரஸ் கட்சியோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் பொன்னார், தமிழிசை வகையறாக்கள் எல்லாம் இப்படி “யார் வீட்டிலோ நடந்த எழவு” என்று கண்டு கொள்ளாமல் இருப்பார்களா?

பிள்ளையார் சிலையை வைத்து அரசியல் நடத்தும் வீரத்துறவியார் ஏன் கோயில் சிலைகள் போலி என்று தெரிந்தும் தனது வீரத்தை ஏன் ஒளித்து வைத்து விட்டார்?

பதில் சொல்லுங்கள் சங்கிஸ்?

உங்கள் மௌனத்தை "நீங்கள்தான் சிலைத் திருடர்கள்" என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். 

3 comments:

  1. இதிலென்ன சந்தேகம்?
    அவங்கதான் திருட்டுப் பசங்க

    ReplyDelete
  2. ஹெச்.ராஜாதான் சிலைத் திருடன். இதை வெளிப்படையாக சொல்ல
    பொன்.மாணிக்கவேல் தயங்குவது ஏன்?

    ReplyDelete
  3. வழக்கமாக ஆங்கிலத்தில் வந்து திட்டிப் போகும் அனாமதேயத்தையும் காணவில்லை. ஆபாசப் பேர்வழியையும் காணவில்லை. இங்கேயும்
    சங்கிகள் கள்ள மௌனம் சாதிப்பது சிலைத் திருடர்கள் அவர்கள்தான்
    என்பதை நிரூபிக்கிறது

    ReplyDelete