Sunday, April 29, 2018

நேற்றைய கொலையாளி, இன்றைய . . .


வேலூர் நகரத்தின் பிரபல தாதா அவர். அவரை கொலை செய்ய மூன்றாண்டுகள் முன்பாக ஒரு முயற்சி நடந்தது. அந்த கொலையாளியை அந்த தாதாவின் மகன்கள் இருவரும் துரத்திச் சென்று பிரதான சாலையில் கல்லை தலையில் போட்டு கொலை செய்தார்கள். அவர்கள் கொலை செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் பிரபலமானது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். அந்த வழக்கு இன்னும் முடியவில்லை. பிணையில்தான் இன்னும் இருக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பாக அந்த தாதா கொல்லப்பட்டு விட்டார். தாதாவின் இடத்திற்கு மகன் வந்து விட்டார். தாதா ஆரம்பித்த பொறியியல் கல்லூரி பொறுப்பு உட்பட.

இரண்டு நாட்கள் முன்பாக அந்த இளைய தாதாவிற்கு பிறந்த நாள்.

அதனை முன்னிட்டு வேலூர் நகரெங்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஃப்ளெக்ஸ் பேனர்கள்.

அனைத்து பேனர்களும் சொன்ன வாசகம்

"இளம் கல்வியாளரே"

என்ன கொடுமை சார் இது!




No comments:

Post a Comment