Saturday, April 7, 2018

எங்க ஊர் பையன் - இரண்டாவது தங்கம் . . .



ஆஸ்திரேலியாவின் கோல்டன் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கம் பளு தூக்கும் போட்டிகளில் சதிஷ்குமார் சிவலிங்கத்தின் மூலமாக கிடைத்தது.

2014 ம் ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமார் பெற்றுள்ள இரண்டாவது தங்கம் இது.

எங்களின் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் என்பதில் எல்லோருக்கும் பெருமை.

மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்ற சதீஷ்குமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.


No comments:

Post a Comment