Friday, April 27, 2018

வெறுப்பேற்றவா முதல் பக்க புகைப்படம் ???







எஸ்.சி/எஸ்.டி வன் கொடுமைச் சட்டத்தை பாதுகாக்க தலித் அமைப்புக்கள் சென்னையில் நடத்திய பேரணியை அனைத்து ஊடகங்களும் முற்றிலுமாக புறக்கணித்தனர்.

தீக்கதிர் தவிர வேறெந்த நாளிதழும் புகைப்படமோ செய்தியோ வெளியிடவில்லை.

ஹிந்து, எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஆங்கில இதழ்களும் இந்த புறக்கணிப்பு வேலையை செய்தன.

பெரும் ஊடகங்கள் மீதான கடுமையான விமர்சனம் வந்த நிலையில்தான் 

நேற்று ஆங்கில ஹிந்து  முதல் பக்கத்தில் திருச்சூர் கோயில் விழாவின் படத்தை ஏதோ மிகப் பெரிய செய்தியாக வெளியிடுகிறது.

தலித் அமைப்புக்களின் போராட்டச் செய்தியை இருட்டடிப்பு செய்யும் அரசியலை கண்டித்தால் கோயில் விழா அதுவும் நம் மாநிலம் கூட கிடையாது, அதை வெளியிடுவது என்பது வெறுப்பேற்றும் வேலையாகத்தான் தெரிகிறது.

இது மோசமான அணுகுமுறை


3 comments:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete
  2. how come by default hindu pro communist.

    only possible most of tamil hindu edotorial staff from dinamani. may be due to old memory did like the burial.

    ReplyDelete