Monday, April 16, 2018

என்.டி.திவாரி, சண்முகநாதன், பன்வாரிலால் . . .



அருப்புக்கோட்டை பேராசிரியையின் ஆடியோ உரையாடலை கேட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது.

மாணவிகளை வலை வீசுவதில் அவரிடம் ஒரு தொழில்முறை அணுகுமுறை (Professional Approach) தெரிகிறது. மாணவிகள் எங்களுக்கு விருப்பமில்லை, இனி இது தொடர்பாக பேச வேண்டாம் என்று சொன்னாலும் அவர் விடுவதாக இல்லை.

அந்த உரையாடலைக் கேட்ட எவருக்கும் தெளிவாகத் தெரிகிற ஒரு விஷயம் என்னவென்றால் 

இவர் வெறும் கீழ்நிலையில் உள்ளவர்தான். தொடர்ச்சியாக இதையே முக்கியமான பணியாக கொண்டவர் என்பதும் தெரிகிறது.

அவர் சார்ந்த கல்லூரி தாண்டி இந்த ஆபாச வளையாத்தில் யாரெல்லாம் உள்ளார்களோ, அவர்கள் அனைவரும் யார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

பேராசிரியை தவிர இதிலே முக்கியமானவராக நாம் அறிவது தமிழகத்தின் ஆட்டுத்தாடி பன்வாரிலால் புரோஹித்.

அந்த மனிதன் ஒரு மோசமான குணாம்சம் கொண்டவன் என்பது கடலூரில் குளியறையில் எட்டிப்பார்த்த போதே தெரிந்ததுதான். இந்த பிரச்சினையில் தொடர்புள்ள திமிலங்கள் யார் என்பது தெரிய வேண்டுமென்றால் எடுக்கப்பட வேண்டிய முதல் நடவடிக்கை ஆளுனரை பதவி நீக்கம் செய்வதுதான்.

ஆளுனர் மாளிகைகளை கேளிக்கை விடுதிகளாக்கிய பெருமை என்.டி.திவாரிக்கும் சண்முகநாதனுக்கும் உண்டு. அந்த ஞான மரபு முடிந்து போகாமல் தமிழக கவர்னர் தாத்தா பார்த்துக் கொள்கிறார் போல . . . 




3 comments:

  1. Governors are also retired politicians.They want to repeat what they have done when they were
    active politicians.

    ReplyDelete
  2. எவ்வளவு நாள்தான் அந்த கிழக்கோட்டான் பாத்ரூம்களை எட்டிப்பார்த்துகொண்டிருக்கும். அந்தப்பேராசிரியை சொன்னமாதிரி அடுத்த லெவலுக்கு (தமிழ்நாட்டில்) செல்லவேண்டாமா. முனைவர் பட்டம் (அதிலும் கணக்குப்பண்னுரதுல) பெற்ற அந்த பேராசிரியையின் 'பல்கலைகழக துணைவேந்தர்' கனவு B.Sc பட்டம்கூட பெறாத நான்கு மாணவிகளால் கலைக்கப்பட்டுவிட்டது. அம்பேத்கார் சட்டப்பல்கலைகழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட ஆள் பாலியல் சர்ச்சையில் சிக்கியவன் என்று தெரிந்தும் ம்வுனமாக இருந்த நமது மாணவ செல்வங்களுக்கு இதுவும்வேண்டும் இன்னமும்வேண்டும். பிரிக்கமுடியாதது 'ஆரியமும்-பாலியலும்'. த்விற்கமுடியதது ஆபாசமும்-சங்கிகளும்.

    ReplyDelete
  3. //பிரிக்கமுடியாதது 'ஆரியமும்-பாலியலும்'. தவிற்கமுடியதது ஆபாசமும்-சங்கிகளும்.//

    true.

    ReplyDelete