Thursday, August 29, 2013

கடவுள் பெயரைச் சொன்னால் கட்டுப்பாடுகள் கிடையாதா?

வேலூர் மாநகரத்தில்  ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு இரண்டு 
ஆண்டுகளாக சில கட்டுப்பாடுகள் உள்ளது. பேனரின் வரைபடத்தோடு
முதலில் நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெற்று பிறகு 
சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அனுமதியை வாங்கி இவற்றை
மாநகராட்சி அலுவலகத்தில் காண்பித்து  இருநூற்று ஐம்பது ரூபாய்
ஒரு பேனருக்கு கட்டி, அந்த ரசீதை ஸ்கேன் செய்து அதையும் அந்த
பேனரில் இணைத்த பின்புதான் பேனர் கட்ட முடியும்.

ஜூன் மாதம் எங்கள் கோட்ட மாநாடு நடைபெற்றபோது இந்த பேனர்
அனுமதிக்காகவே ஒரு குழுவே போட்டு விட்டோம். நிகழ்ச்சிக்கு
மூன்று நாட்கள் முன்பாகத்தான் பேனர் அமைக்க வேண்டும். 
நிகழ்ச்சி முடிந்த மறு நாளே எடுத்து விட வேண்டும் என்ற
கட்டுப்பாடுகளும் உண்டு.

அதே போல ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி 
வாங்குவதற்குள் உயிர் போய் விடும். ஜனநாயகத்திற்கு அரசு
கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்.

கலைஞர் பிறந்த நாளுக்காக திமுக வினர் அனுமதி பெறாமல்
வைத்த பேனர்களைக் கூட இந்த ஆண்டு அகற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த கெடுபிடிகள் எல்லாம் ஆளும்கட்சிக்கு
பொருந்தாது என்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்.

ஆளும் கட்சி மட்டுமல்ல கடவுள் பெயரைச் சொன்னாலும்
கட்டுப்பாடுகள் கிடையாது என்ற புதிய நிலைமை இப்போது
தோன்றியுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஒரு ஜாதிய அமைப்பு
ஏராளமான பேனர்களை இன்று நிறுவியுள்ளது. ஆனால் 
ஒன்றில் கூட அனுமதி பெற்றதற்கான ரசீது கிடையவே
கிடையாது. 

அதே போல சில நாட்கள் முன்பாக ராகவேந்திரர் கோவில்
திருவிழா நடந்தது. அப்போது பதினைந்து நாட்கள் அனுமதி
பெறப்படாத பேனர்களை வேலூர் முழுதும் பார்க்க முடிந்தது.

சட்டம் ஒழுங்கு எல்லாம் சட்டத்தை மதிப்பவர்களுக்கு
மட்டும்தான் போல. 

இது என்ன அரசு?
இது என்ன நிர்வாகம்?
 

1 comment:

  1. சட்டம் ஒழுங்கு ? அதுவும் வேலூரில் ? உங்களக்கு அதீத ஆசை தோழரே .

    ReplyDelete