நேற்று ஆங்கில இந்து இதழில் வெளியான செய்தி இது.
பீகாரைச் சேர்ந்த "ஹேமந்த் ரஸ்தோகி" என்ற நபர், டி.டி.இ போல வேஷம் போட்டு அஸ்ஸாமைச் சேர்ந்த அலி என்ற நபரிடம் டிக்கெட் வாங்கித் தருவதாகச் சொல்லி 7500 ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
பணம் கொடுத்து விட்டு அலி டிக்கெட்டுக்காக காத்த்த்த்த்த்த்த்த்த்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ரஸ்தோகியும் வரவில்லை, டிக்கெட்டும் வரவில்லை.
ஏமாந்து விட்டோம் என்று தெரிந்து போலீசில் புகார் கொடுக்க, அவர்களும் அந்த மோசடிப் பேர்வழியை கண்டு பிடித்து பணத்தை மீட்டுக் கொடுத்து விட்டார்கள்.
இந்த சம்பவம் நடந்தது காட்பாடி ரயில் நிலையத்தில். . . .
பீகாரைச் சேர்ந்த ஒருவன் அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டில் வைத்து ஏமாற்றியுள்ளான்.
பிகு: தலைப்பில் பெயரைப் பார்த்து வேறு யாரோ என்றுதானே நினைத்தீர்கள் 😛😛😛😛😛
No comments:
Post a Comment