ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் அசிங்கமாக நடந்து கொண்டது பற்றி என் மகனோடு பேசிக் கொண்டிருக்கையில் அவன் ஒரு காணொளியைக் காண்பித்தான்.
அதனை நீங்களும் பாருங்கள்
பாகிஸ்தான் வீரரின் ஷூ லேஸை விராத் கோலி கட்டி விடுகிறார். பார்க்க எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இதுதான் விளையாட்டின் நோக்கம்!
சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதுதானே விளையாட்டின் உன்னதத்தைச் சொல்லும்!
83 திரைப்படத்தில் ஒரு காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகக் கோப்பை துவங்கும் முன்பாக அணிகள் வரிசையில் நிற்கையில் கபில்தேவ், பாகிஸ்தான் கேப்டன் இம்ரான்கானை சென்று பார்த்து நலம் விசாரிப்பார். இருவருக்கும் உள்ள தோழமையை அந்த காட்சி உணர்த்தும்.
இவையெல்லாம் நல்ல உதாரணங்கள். எல்லோரும் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள் . . .
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment