ஆட்டுக்காரன் நேற்று ஒரு காணொளி வெளியிட்டுள்ளான். கிராமத்தில் ஒரு நாள் என்று மாட்டை குளிப்பாட்டுவது, சாணி அள்ளுவது, மண்வெட்டியை பிடித்து வேலை செய்வது போல பல சீன்கள் அதில் உண்டு.
முழு காணோளியை போட்டு ஆட்டுக்காரனுக்கு விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. அதுவும் அந்த இந்து தமிழ் திசை வெளியிட்ட காணொளியில் பகிரப்பட்ட எஸ்.பி.பி பாட்டு ஆட்டுக்காரனுக்கு ஓவர் ஹைப் கொடுப்பதால் உருவான எரிச்சலாலும் அதனை பகிரவில்லை.
மாட்டைக் குளிப்பாட்டுவதும் சாணி அள்ளுவதும் இழிவானதா என்று சில அனாமதேயங்கள் அறிவுபூர்வமாக கேட்பதாக நினைத்து அபத்தமாக கேட்பார்கள்.
எந்த ஒரு வேலையும் இழிவானதே இல்லை. கண்டிப்பாக இல்லை.
ஆனால் ஆட்டுக்காரன் போடுவது சீன். நாடகம். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆரின் பட்டு வேட்டி பட்டு சட்டை கசங்காமல் இருப்பது போல ஆட்டுக்காரனின் சட்டையும் எப்படி கசங்காமல் இருக்கிறது?
சேற்றில் வேலை செய்தும் கால்களும் கைகளும் எப்படி சுத்தமாக இருக்கிறது?
ஆனால் ஒன்று.
மோடியே பொறாமைப்படும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகன் ஆட்டுக்க்காரன்.


No comments:
Post a Comment