ஆஸ்கார் அமைதி விருதுக்கான கனவுப் போட்டியில், ஓ சாரி நோபல் அமைதி விருது வாங்க மோடியோடு துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் டரம்பு ஹமாஸ் இயக்கத்திற்கு கெடு விதித்துள்ளார்.
அவர் முன்மொழிந்த காஸா அமைதித் திட்டத்தை அவர் சொன்ன காலக்கெடுவிற்குள் ஹமாஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு தான் நரகத்தை காண்பிக்கப் போவதாக ட்ரம்பு மிரட்டியுள்ளார்.
ஆமாம், ட்ரம்பு, இப்போ காஸாவில எல்லோரும் சொர்க்கத்திலியா வாழ்ந்து கிட்டு இருக்காங்க?
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் பெண்களையும் குழந்தைகளையும் மருத்துவமனைகளையும் குறி வைத்து நடந்து காஸா முழுதுமே இடிபாடுகளாக மாறியுள்ளது. பசியும் பட்டினியும் நோயும் காயங்களும் சடலங்களும் என ஏற்கனவே காஸா நரகமாகத்தான் இருக்கிறது.
இதிலே புதிதாக எந்த நரகத்தை காண்பிக்கப்ப் போகிறாய்?
பிகு: காலையில் செய்தித்தாளை பார்த்து எழுதிய பதிவு இது. வேறு வேலைகள் காரணமாக உடனடியாக பதிவிட முடியவில்லை. இப்போது பார்த்தால் நிலைமை மாறியுள்ளது. அது பற்றி விரிவாக இன்றோ, நாளையோ எழுதுகிறேன்.
அல்லா அவர்களுக்கு நல்வழி காட்டுவார்
ReplyDeleteட்ரம்பிற்கும் நெதன்யாஹூ விற்கும் தானே?
Delete