Thursday, February 9, 2023

செம ப்ளான் ஓபிஎஸ்

 


ஈரோடு கிழக்கு தொகுதியில் தன்னுடைய வேட்பாளரை திரும்பப் பெறுவது என்று ஓபிஎஸ் முன்னரே ப்ளான் செய்து விட்டார்.

ஆமாம்.

நேற்று அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன தெரியுமா?

படிவங்கள் முறையாகக் கொடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, வேட்பு மனுவை அத்தொகுதி வாக்காளர்கள் பத்து பேர் முன்மொழியவும் இல்லை.

போட்டியிடுவது என்றால் இதெல்லாம் சரியாக இருந்திருக்கும். எஜமான் உத்தரவிட்ட பின்பு எப்படியும் வாபஸ் வாங்கத்தானே போகிறோம் என்பதால் இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை.

இப்போது ஆட்டுக்காரன் சொன்ன படி போட்டியிடவில்லை என்ற பெயர் கிடைத்து விட்டது. எஜமான விசுவாசத்தையும் நிரூபித்தாகி விட்டது.

செம ப்ளான் ஓபிஎஸ்.

1 comment:

  1. குக்கரை மறந்தீட்டிங்களே?

    ReplyDelete