Saturday, February 25, 2023

"மத்யமர் ஆட்டுக்காரன்" மாண்பு

 


"மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் அதன் மாடரேட்டர் ஒருவர் அபாண்டமாக ஒரு பொய் சொன்ன போது

"உங்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை" என்று கமெண்ட் போட்டவுடன் அவர் கடுப்பாகி விட்டு நம்மையும் நக்கலடித்து அந்த குழுவின் மாண்புகளைப் பற்றி சொற்பொழிவாற்றினார்.



அதற்கடுத்த சில மணி நேரங்களிலேயே ஐகோர்ட்டு ராசாவுடன் எடுத்த போட்டோவை ஃப்ரொஃபைல் படமாக வைத்திருந்த ஒருவர் சில மாநில முதல்வர்களை இழிவு படுத்தி எழுதியிருந்தார்.


இதுதான் உங்க மாண்பா என்று நான் அந்த மாடரேட்டரை கேட்க,  இணைப்பைக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று வீர வஜனம் பேசினார். 


ஆனால் அந்த பதிவோ அல்லது முதல்வர்களை இழிவு படுத்தியதோ இன்னும் நீக்கப்படவில்லை.

படியளக்கும் எஜமானர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ன! அதனால்தான் திரு திருவென்று முழிக்கிறார்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete