Thursday, February 16, 2023

ஏடிஎம் கொள்ளை - தனியார்மயத்தின் விளைவு

 



திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை தொடர்பான நேற்றைய பதிவின் தொடர்ச்சி

 

ஏடிஎம் ம்மை உடைத்தவர்கள் யார் என்பது அங்கிருந்த சி.சி,டிவி காமராக்களில் பதிவாகவில்லை.,

 

ஏடிஎம்மை உடைத்தால் காவல் நிலையத்திலும் வங்கியிலும் ஒலிக்க வேண்டிய அலாரம் ஒலிக்கவில்லை.

 

இந்த ஏ.டி.எம் களில் காவலர்களும் இல்லை.

 

என்ன காரணம்?

 

பணம் வைப்பது முதற்கொண்டான ஏ.டி.எம் தொடர்பான பராமரிப்பு சேவைகள் அனைத்தும் இப்போது வங்கிகளால் அரசு வங்கிகளும் சரி, தனியார் வங்கிகளும் சரி அவைகளால் நேரடியாக செய்யப்படுவதில்லை. அவை ,அனை,த்தும் சில ,தனியார் ஏஜென்ஸிகளுக்கு அவுட்சோர்ஸிங் முறையில் ஒப்பந்தத்திற்கு கொடுக்கப்ப்பட்டு விட்டன.

 

காமெரா இயங்குகிறதா, அலாரம் இயங்குகிறதா என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை.

 

கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம் களில் மட்டுமா?

 

பெரும்பாலான ஏ.டி.எம் களில் இதுதான் நிலை என்று சொல்கிறது போலீஸ்.

 

அதே போல இப்போதெல்லாம் ஏ.டி.எம் களில் செக்யூரிட்டிகளை பார்ப்பதும் அரிதாகி வருகிறது. எதற்கு சம்பளம் கொடுப்பது என்று நிறுத்தி விட்டார்கள் போல..

 

தனியார்மயம் என்றால் அலட்சியம் என்பதற்கு பல உதாரணங்கள் ஏற்கனவே இருக்கிறது. ஏ.டி.எம் பராமரிப்பு புதிய உதாரணம்.

 

இந்த சமயத்தில் இன்னொரு திரைப்படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. விக்ரம் பிரபு நடித்த ஒரு படத்தில் .ஏ.டி.எம் பராமரிப்பு சேவை நிறுவன ஊழியர்கள் எப்படி போலி கார்டுகளை உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சூறையாடுவார்கள் என்பதைக் காண்பித்திருப்பார்கள்.

 

வங்கிகள் பராமரிப்பு சேவைகளை தாங்களே செய்யாவிட்டால் இந்த மோசடிகள் கூட எதிர்காலத்தில் அதிகமாகி விடும்.

No comments:

Post a Comment