Wednesday, February 8, 2023

பசு மாட்டை கட்டிப்பிடிக்கனுமா?

 


மனிதர்கள்  காதலர் தினம் கொண்டாடும் பிப்ரவி 14 ம் தேதி அன்று பசு மாட்டை கட்டிப்பிடியுங்கள்  என்று விலங்குகள் நல வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஒன்றிய  அமைச்சகம் சொன்னதால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாம்.

 


பசு மாட்டை கட்டிப் பிடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு என்று வேறு அந்த சுற்றறிக்கை சொல்கிறது.

 ஆக, காதலர் தினம் அன்று சங்கிகள் கையில் தாலியை வைத்துக் கொண்டு திரிவதற்குப் பதிலாக பசு மாடுகளை கட்டிப் பிடிக்க அலைவார்கள்.

 தமிழ்நாட்டு சங்கிகள் ராமராஜன் பாடல்களான “செண்பகமே செண்பகமே” “பேச்சி, பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி”  போன்ற  பாடல்களை பாடி மாடுகளை    கவர்வதற்கு முயற்சி செய்வார்கள். மற்ற மாநிலத்துக்காரர்கள்       என்ன செய்வார்கள்?

 மோடி கட்டிப்பிடிப்பதற்கும் மோடி கட்டிப் பிடிப்பதை போட்டோ எடுப்பதற்கும் ஒத்துழைக்கக் கூடிய ஒரு மாட்டை கண்டுபிடிக்க வேண்டிய ஒரு வேலை அவரது அதிகாரிகளுக்கு இருக்கிறது.

 யப்பா! பசு மாட்டு உரிமையாளர்களே,  உங்கள் பசு மாடுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பாலை திருடினால் கூட பரவாயில்லை, சங்கிகள் உங்கள் பசு மாட்டை கட்டிப் பிடிப்பதோடு நிற்காமல் ஓட்டிக் கொண்டு போய் விடப் போகிறார்கள். அண்டாவோடு பிரியாணியை திருடுபவர்கள் அவர்கள்.

 பிகு 1 : காதலர் தினத்தை பசுவோடு கொண்டாடும் சங்கிகள் அடுத்து பசுவை கல்யாணமும் செய்து கொண்டு குடும்பமும் நடத்துவார்களா?

 பிகு 2 : பசு மாட்டோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆடுகளையும் இணைத்திருந்தால் ஆட்டுக்காரன் குஷியாகி இருப்பான் அல்லவா!

 பிகு  3 : ஒன்றிய அரசு வழி காட்டி விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கைக்கு “மத்யமர் ஆட்டுக்காரன்” குழு சங்கிகள் என்ன முட்டு தரப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment