Saturday, February 11, 2023

பாவம்யா முட்டுச் சங்கிகள்

 


அதானி ஊழல் தொடர்பாக மோடி நாடாளுமன்றத்தில் கள்ள மௌனம் சாதித்ததை திசை திருப்ப பசு கட்டிபிடி தினத்தை அறிவித்தார்கள்.

அதானி பிரச்சினையையும் மூடி மறைக்க முடியவில்லை. பசு கட்டிப்பிடி தினமும் பயங்கர கேலிக்கூத்தாக உலக அளவில் மாறி விட்டது.

அதனால் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டது.


பெரும்பாலான சங்கிகள் அடக்கித்தான் வாசித்தார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் காணாமல் போயிருந்தார்கள்.

சில முரட்டு சங்கிகள் மட்டுமே முட்டு கொடுத்திருந்தார்கள். மூத்த்த்த மாலன் மட்டும் வாங்கிய காசுக்கு மேலேயே கூவி ஏதோ எழுதியிருக்கிறார் என்பது மட்டும் அவரை பலர் கழுவி ஊற்றியதால் தெரிந்தது. அவர்தான் தன் பக்கத்தை திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டியிருக்கிறாரே!

அது மாதிரி முட்டு கொடுத்த சங்கிகளுக்குத்தான் இப்போது பரிதாப நிலை.

ஆனாலும் ஒன்று . . .

இத்தினம் திரும்பப் பெறப்பட்டதில் எனக்கு என்னமோ வருத்தம்தான்.
எத்தனை கூத்து நடந்திருக்கும்!
மிக முக்கியமாக பசுவைக் கட்டிக் கொண்ட மோடியின் போட்டோ . . .
கடைசியில் "வட போச்சே"

No comments:

Post a Comment