Sunday, February 12, 2023

தீர்ப்பல்ல, ஆளுனர் நுழைவுத் தேர்வு

 


சில வருடங்கள் முன்பாக படித்ததை ஆளுனர் நியமன அறிவிப்பு நினைவு படுத்தி விட்டது.

"இப்போதெல்லாம் சில நீதிபதிகள் தீர்ப்பெழுதுவதில்லை. ஆளுனர்,எம்.பி, தூதர் போன்ற அடுத்த பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதுகிறார்கள்"

இதெல்லாம் 2014 முதல் வந்த கொடுமை.

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் எழுதிய முகநூல் பதிவை படியுங்கள் .வலி புரியும்.

யாரென்று தெரிகிறதா?

உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டதில் ஆச்சரியமில்லை.

அவர் பாபர் மசூதி வழக்கிலும், செல்லாப் பண நடவடிக்கை வழக்கிலும் ‘அவர்களுக்கு’ சாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் அமர்வில் (bench) அங்கம் வகித்தவர்.

மேலும் இந்துத்வத்திற்கு ஆதரவாகப் பேசி வருபவர். டிசம்பர் 26, 2021 அன்று ஆர் எஸ் எஸ்சின் துணை அமைப்பான அகில் பாரதீய அதிவக்ட பரிஷத் இந்திய நீதித் துறையை பாரதீய கலாச்சார்த்திற்கு உகந்த வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் வழக்கறிஞர்களுக்கானது) தன் தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்தியது. அதில் பேசிய நசீர், “இந்திய நீதித் துறை மனு, சாணக்கியர், காத்தாயனர், பிரஹஸ்பதி, நாரதர், யாக்யவாக்கியர். போன்றவர்கள் உருவாக்கிய சட்டப் மரபை புறக்கணித்து வருகிறது. காலனிய நீதி அமைப்பைப் பின்பற்றுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேச நலனுக்கும் எதிரானது.”

அவருடய உரை குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் கட்டுரை வெளியிட்டோம். Live.law என்கிற இணைய இதழிலும் விவரங்கள் வெளியாயின.

No comments:

Post a Comment