Sunday, February 12, 2023

மோடி, வைத்துக் கொண்டா வஞ்சகம்????

 


அதானி நிறுவன முறைகேடுகள், அதானி அரசு கூட்டுக் களவாணித்தனம் குறித்து பதில் சொல்வதற்குப் பதிலாக "ராகுல் காந்தி ஏன் நேரு பெயரை தன் பெயரோடு இணைத்துக்கொள்ளவில்லை?" என்று கேணத்தனமான கேள்வியை கேட்டுள்ளார்.

இந்தியக் கலாச்சார காவலர்களாக சீன் போடும் சங்கிகளுக்கு தந்தையின் குடும்பப் பெயர்தான் தொடரும் என்பது தெரியாதா என்ன!

இல்லை காவிக்கயவர்களின் திட்டம் வேறு

இவர்களாகவே உருவாக்கிய கட்டுக்கதையான ஃபெரோஸ் காந்தியின் உண்மையான பெயர் ஃபெரோஸ் கான் என்பதை மீண்டும் பரப்பி பிரச்சினையை திசை திருப்பும் கேவலமான உத்தி. 

அது மட்டுமல்ல, அதானிக்கு சில மாநிலங்களில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் குறித்த சின்ன பட்டியலைப் போட்டு மோடி மட்டுமா உதவினார் என்று திசை திருப்பும் இன்னொரு கேவலமான பதிவும் உலா வருகிறது. இங்கே கூட ஒரு அனாமதேயம் அதை வாந்தி எடுத்தது.

ஏன் இப்படி திசை திருப்புகிறார்கள்?

எளிய காரணம்.

அதானி வளரவும் ஏமாற்றவும் மோடிதான் காரணம்.

வேறு காரணம் ஏதுமில்லை.

அப்படி இருந்திருந்தால் அதை வைத்துக் கொண்டா மோடி வஞ்சகம் செய்வார்! 


No comments:

Post a Comment