Tuesday, February 16, 2021

சிரிப்பை அடக்க முடியவில்லை

 


இது மத்யமர் குழுவில் பார்த்த ஒரு பதிவுதான்.



 இதைப்படித்தவுடன் நிஜமாகவே சிரிப்பு வந்து விட்டது. அதையே அந்த பதிவில் பின்னூட்டமாகவும் பதிவு செய்து விட்டேன்.

 இதோ அந்த பின்னூட்டம்

 குஜராத் மாநிலத்தில் கலவரத்திற்கு பின்பு சிறுபான்மையினர் தங்கி இருந்த அகதி முகாம்களை “குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை” என்றும் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை “காரின் டயரில் சிக்கி செத்துப் போன நாய்க்குட்டிகள்” என்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்ட களத்தில் நிற்பவர்களை போராட்டத்தால் பிழைப்பவர்கள், ஒட்டுண்ணிகள் என்று கொச்சைப்படுத்திய, மன நில குன்றியர்வர்களுக்கான ஒரு நிகழ்ச்சியில் “நாற்பது வயதானாலும் மன வளர்ச்சி இல்லாதவர் என்று ராகுலை சொன்ன மோடி சாத்வீகத்தன்மையுடன் கருத்துக்களை வெளிப்படுத்துபவர் என்று படித்ததும்  வாய் விட்டு சிரித்து விட்டேன்.  

 அதே சமயம் “அடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியப் பெண்களை கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்” என்று சொன்ன யோகி முரட்டுத்தனமாக கருத்துக்களை வெளிடுபவர்தான் என்பதை ஒப்புக் கொண்ட உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்.

 மோடி நல்லவர், வல்லவர் என்று நன்றாக மூளைச் சலவை செய்து வைத்துள்ளனர். மோடி மாயையிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது மிகப் பெரிய சவால்.

90 % க்கு மேல் சங்கிகளாலும் ஜாதி ஆதிக்க உணர்வுள்ளவர்களாலும் நிரம்பி வழிகிற அந்த குழுவில் நான்கைந்து பதிவுகளோ பின்னூட்டங்களோ பாஜகவிற்கு எதிராக வந்தாலும் அவர்களால் தாங்க முடியவில்லை என்பதை கீழே உள்ள இன்னொரு பதிவு காண்பிக்கிறது.

வெறியூட்டப்பட்டு விஷமாய் மாறியவர்கள் இவர்கள்


No comments:

Post a Comment