Thursday, May 23, 2019

ராஜீவ் காந்தி கொலையான அந்த இரவில்

அந்த இரவு நானும் ராமலிங்கம் என்ற தோழரும் நெய்வேலி அமராவதி திரையரங்கில்    வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பத்தாவது முறையாக இரவுக் காட்சி  பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் நிதானமாக டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்

அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லைநெய்வேலி   ஊழியர் குடியிருப்பில் ஆட்டோமேடிக் பூட்டு என்பதால் கதவை திறக்க வீட்டில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காதுகாலை  ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது   மட்டுமே தெரிந்ததுஅவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து  ஃபிரிட்ஜில வச்சுக்குங்கஇனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி   விட்டு போனார்.

ஒரு அனிச்சை செயலாக நானும் விஸ்வேஸ்வரராவ் என்ற தோழரும் 
பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க 
விட்டோம்சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை 
தொடங்கி விட்டார்கள்திமுகசிபிஎம்சிபிஐஜனதாதள்தொமுசசி..டி.யு என அத்தனை கட்சிசங்கங்களின் கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள்தப்பிய ஒரே கொடி  எங்கள் சங்கத்தின் கொடி. 

அதைத் தவிர இன்னொரு அமைப்பின்கட்சியின் கொடியை மட்டும் 
கை வைக்கவில்லை.

அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள். 

அன்றைய நாள் முழுதும் ரௌடிகள் ராஜ்ஜியம்தான்மாலை மெயின் பஜார் பக்கம் சென்றால் அப்போதும் களேபரங்கள் ஓயவில்லைபேனர்களை வெட்டி சாய்த்து 
தீயிட்டு கொளுத்திக் கொண்டிருந்தார்கள். 

போலீஸ் கூட கையில் குண்டாந்தடிகளோடு வந்ததுஅராஜகத்தில் 
ஈடுபட்டவர்களை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் 
போன்றவர்களை விரட்டுவதில்தான் தன் வீரத்தைக் காண்பித்தது. 

அன்று நடந்த படுகொலை இந்திய அரசியலின்பொருளாதாரத்தின் திசை வழியை மாற்றியது என்பதும் முக்கியமானது.

மீள் பதிவு : சில கூடுதல் வரிகளின் இணைப்போடு

21.05.2019 அன்று பகிர்ந்து கொள்ள வேண்டியது, கொஞ்சம் தாமதமாக

2 comments:

  1. என்னம்மா கண்ணு சவுக்கியமா ?

    ReplyDelete
    Replies
    1. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவச் சிரிப்பு

      Delete