Tuesday, May 14, 2019

களவாணியோடு மோடி மட்டும் மிஸ்ஸிங் . . .




ஆஸ்திரேலியாவில் கைதான இந்தியச் சாமியார்



அலகாபாத்தில் உள்ள படே அனுமான் கோயிலின் தலைமைப் பூசாரியும் யோகா கற்றுத் தருபவருமான  ஆனந்த் கிரி என்ற சாமியார், பாலியல் தாக்குதல் குற்றங்களுக்காக ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கூட மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆஸ்திரேலியப் பயணத்தின் போது அவரிடம் யோகா கற்றுக் கொள்ள வந்த இரண்டு பெண்கள் மீது பாலியல் கொடுமை இழைத்த காரணத்திற்காக அடுத்த முறை அவர் அங்கே வந்த போது கைது செய்யப்பட்டு விட்டார்.

சாமியார்கள் என்றாலே போலிச்சாமியார்கள் என்பதை ஒவ்வொருவரும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தவறிழைப்பதற்கான லைசன்ஸாகவே காவி உடை பயன்படுகிறது போல.

பிரம்மச்சாரியான அனுமார் கோயிலின் தலைமைப் பூசாரி ஒரு பெண் பித்தன் என்பது பெரிய முரண் நகை!

இப்படி பாலியல் குற்றங்களில் ஆனந்த் கிரி ஈடுபடுவதற்கான தைரியம் எங்கிருந்து கிடைக்கிறது?

கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள்

துணை ஜனாதிபதி



உ.பி முதல்வர் மொட்டைச் சாமியார்



முன்னாள் ராணுவத் தளபதியும் இப்போதைய மத்திய அமைச்சருமான வி.கே.சிங்


 இன்னொரு போலிச்சாமியார் ராம்தேவ்


இவர்கள் துணை நிற்பார்கள் என்ற தைரியம்தானே!

களவாணிப் பயலோடு இவர்களுக்கு ஏன் சகவாசம்!

மோடியோடு மட்டும் ஏன் இவன் போட்டோ இல்லை என்று தெரியவில்லை !


3 comments:

  1. கூடிய சீக்கிரம் வந்துருவார் கேடி...

    ReplyDelete
  2. நல்லா பாருங்க மூன்றாவது போட்டோல மோடி இருக்கா

    ReplyDelete