Sunday, May 5, 2019

அவனுக்கு இன்னொரு பெயருண்டு

அவனுக்கு இரண்டு பெயர்கள் !

மூதாதையர்கள் சிந்திய
ரத்தம் முழுவதையும்
முதலில் அளந்தவன் அவனே !

உற்பத்திப் பொருட்களின்
ஓரத்தில் படிந்த
ரத்தத்தை பார்த்த
முதல் மனிதன் அவனே !

அவன்
மின்சாரத்தைப்
புத்தகங்களில் அடைத்து
மனிதனிடம் கொடுத்தான்
பிடித்தவர்கள் தலைகளில்
பல்புகள் எரிந்தன ..

பனித்துளிகளை எல்லாம்
சேகரித்து
பாலருவியாய் ஓடவிடும்
பொறுமை அவனுக்கிருந்தது...

அவனுக்கு
விரக்தி வந்திருந்தால்
விரக்திக்கு மருந்து
கிடைத்திருக்காது ....

பழைய சமூக அமைப்பிற்கு
சவப்பெட்டி ஒன்றை
தன் கையாலேயே
செய்து முடித்த பின்தான்
மானுடம் அவனது சவப்பெட்டியில்
மங்காத ஒளிவிளக்கை
ஏற்றிவைத்தது ..

அவனுக்கு
இரண்டு பெயர்கள்
ஒன்று மார்கஸ்
மற்றொன்று உண்மை !!

- கவிஞர் கந்தர்வன்

5 comments:

  1. வங்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு மொத்தமாக ‘RIP போடப்போகிறார் மம்தா

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்.
      நீ செத்துப் போனா எனக்கு தகவல் சொல்லச் சொல்லிட்டு செத்துப் போ.
      ஒரு தெரு நாய் செத்துப் போனது என்று RIP போட்டு ஒரு பதிவு எழுதறேன்

      Delete
  2. மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    ---------------------------

    போற போக்கை பார்த்தா சர்வாதிகாரி ஜான்சி ராணி வங்கத்து பூலான் தேவி ஒரே நாளில் கம்யூக்களை போட்டு தள்ளி விடுவார் போல உள்ளது
    அடுத்த வருடம் தமிழ்நாட்டு கும்பல் வங்கத்துக்கு சுற்றுலா போக முடியாது

    ReplyDelete
    Replies
    1. எத்தனை தெரு நாய்களை ஒரே நாளில் அடிக்கிறது?
      ஓடிப் போடா நாயே

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete