Wednesday, May 22, 2019

தியான மோடி : வெளம்பரம்தானாம்!



தியான மோடிக்கு முட்டு கொடுக்கும் . . .

ரேடார் விஞ்ஞானம் அவரை ஒரு முட்டாள் என்று காண்பித்தது. அதனால் சங்கிகளால் அவருக்கு முட்டு கொடுக்க முடியவில்லை. வாயைப் பொத்திக்கொண்டு இருந்தார்கள்.

டிஜிட்டல் காமெரா,. ஈமெயில் விவகாரம் அவர் ஒரு பொய்யர் என்று நிரூபித்து விட்டது. அதனால் அதற்கும் முட்டு கொடுக்க முடியவில்லை. கப்சிப்பென்று இருந்து விட்டார்கள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிலோ அவரே வாய் திறக்கவில்லை. அதனால் இவர்களுக்கும் வாய் திறக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்து கேதார்நாத் காமெடி. குகையில் அந்த கால முனிவர் போல கடுந்தவம் இருப்பதாக ஒரு பில்ட் அப் செய்ய முயன்றார். ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படிஷன் போல முதலில் ஒரு அலங்கார ஆடை அணிந்து கொண்டவர் பின்பு முகத்தைத் தவிர முழுமையாக காவி உடை அணிந்து கொண்டு விஸ்வாமித்திரர் (ராஜரிஷி படத்தில் சிவாஜி, அப்பறம் ஒரு சீரியலில் யாரோ ஒருவர் {பெயர் மறந்து விட்டது}  )  போல  போஸ் கொடுத்தார்.

பிறகுதான் தெரிய வந்தது. அந்த குகையே மோடி போல ஒரு டுபாக்கூர் என்று. குகை போல வடிவமைக்கப்பட்ட, ஏசி, அட்டாச்ட் பாத்ரூம், ரூம் சர்வீஸ்,  நல்ல மெத்தை போன்ற வசதிகள் நிரம்பிய ஒரு காட்டேஜ் ரூம் என்று.  அதன் பின்பு மோடி மீண்டும் வறுபடத் தொடங்கினார்.

பாவம் பக்தாளால் தாங்க முடியவில்லை.

வேறு வழியில்லாமல் மோடிக்கு முட்டு கொடுக்க ஒரு வாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

கேதார்நாத்தில் வெள்ளம் வந்ததால் (அந்த சமயத்தில் குஜராத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கானவர்களை இன்னோவா மூலம் ராம்போ போல மோடி காப்பாற்றினார் என்று அடித்து விட்ட கதை நினைவுக்கு வருகிறதா?)  ஏற்பட்ட மிகப் பெரிய அழிவிற்குப் பிறகு அங்கே சுற்றுலாப்பயணிகள், அதிலும் குறிப்பாக வெளி நாட்டினர்  (கவனிக்க, கேதார் நாத் கோயிலுக்கான பக்தர்கள் என்று சொல்லவில்லை, சுற்றுலாப் பயணிகள் என்றுதான் சொல்கிறார்கள்) வருகை குறைந்து விட்டதாம். அவர்கள் வருவதை ஊக்குவிக்கத்தான் அந்த குகை காட்டேஜ் ஹோட்டல் கட்டப்பட்டதாம். அப்படியும் அங்கே வருகையில் முன்னேற்றம் கிடையாதாம். 

ஆகவே சுற்றுலாப்பயணிகள் வருவதை ஊக்குவிக்க, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவே மோடியே போய் குகையில் தங்கினாராம். அவரது நோக்கம் கேதார்நாத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமாம். இந்த உயர்ந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் கிண்டலடிக்கிறார்களாம்.

இதுதான் அந்த முட்டு . . .

சரி இதையெல்லாம் எப்போது  சொல்கிறார்கள்?

நாட்டின் நன்மைக்காக பிரார்த்தனை குகை ஒன்றில் தன்னை சிரமப்படுத்திக் கொண்டு தியானத்தில் ஈடுபடுகிறார் என்று புல்லரித்துப் போய் பில்ட் அப் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படியெல்லாம் அது ஒன்றும்  இயற்கையான குகை அல்ல, தியானம் செய்யப் போனவர் ஏனய்யா போட்டோகிராபர்களோடு போனார் என்ற கேள்விகள் வந்த பின்னர் இப்போது புது காரணத்தை கண்டு பிடித்துள்ளனர்.

இதிலும் சில கேள்விகள் வருகிறது.

குகைகள் முன்பே கட்டப்பட்டிருந்தாலும் அவை மோடி வரும் வரை அது பூட்டியே வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. காட்டேஜ் குகையை பூட்டி வைத்து விட்டு யாரும் வரவில்லை அதனால்தான் மோடி அங்கே போனார் என்று ஏன் இப்போது கதை விடுகிறீர்கள்?

மோடி அங்கே போனது வெறும் விளம்பரத்திற்காக என்றுதான் எல்லோரும் கிண்டலடித்தார்கள். இப்போது நீங்கள் சொல்வதும் அதுதான். விளம்பர தூதுவர் என்று சேர்த்து சொல்கிறீர்கள்.

சரி, சரி

ஜியோவிற்கும்
பேடிஎம் மிற்கும்

விளம்பர தூதுவராக வேலை பார்த்தவர்தானே!

No comments:

Post a Comment