Tuesday, May 21, 2019

மோடி மன்னிக்க மறுத்தது ஏன்?



கோட்சேவை பாராட்டிய வெடிகுண்டு சாமியாரை மன்னிக்க மாட்டேன் என்று மோடி சொல்லியுள்ளார்.

ஏன் மன்னிக்க மாட்டார் தெரியுமா?

மோடியின் மங்கி பாத்தைக் கேளுங்க, அதாங்க மனதின் குரல்

“எதுக்குய்யா மன்னிப்பு கேட்கனும் அந்தப் பொண்ணு, எதுக்கய்யா மன்னிப்பு கேட்கனும்?
அப்படி என்னய்யா தப்பா சொல்லிடுச்சு அந்த பொண்ணு?
காந்தியைக் கொன்னவரு தேச பக்தருன்னு சொல்லிடுச்சு.
யாருய்யா காந்தியைக் கொன்னது? 
முஸ்லீமா? கிறிஸ்துவனா? இல்லை கம்யூனிஸ்டா?
நம்மாளுதான கொன்னாரு!
யாரு சொல்லி கொன்னாரு?
நம்ம தலைமை சொல்லி கொன்னாரு!
நம்ம குரு பீடம் சொல்லி காந்தியை போட்டுத் தள்ளின ஒத்தரை நாம பாராட்டாம திட்டவா முடியும்?
ஏதோ நான் இப்ப பிரதமரா இருப்பதால வாய் திறந்து சொல்ல முடியலை. அந்த பொண்ணு தைரியமா சொல்லிடுச்சு. நான் விரும்பற ஒரு விஷயத்தை சொன்ன ஒரு பொண்ணை எதுக்கய்யா நான் மன்னிக்கனும்? என்னை நானே மன்னிச்சுக்க முடியுமா?
அந்த பொண்ணு மேல எனக்கு கோபம் இருந்தா எம்.பி சீட்டு கொடுத்திருப்பேனா?
கோட்சே துப்பாக்கியால சுட்டா, வெடிகுண்டு வச்சு அடுத்த லெவலுக்கு  போன பொண்ணுய்யா அது. அஞ்சு வருஷத்துக்கு முன்னையே எம்.பி ஆக்கி மந்திரியாக்கிருக்கனும்யா . . .
மன்னிக்க மாட்டேன்னு சொன்னதை சில கேணையங்க ஏதோ எனக்கு கோபம்னு நினைச்சுக்கறாங்க,
மன்னிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதுதான்  அர்த்தம்னு புரிஞ்சுக்கோங்கய்யா!

பிகு
ரெண்டு நாள் முன்னாடியே எழுதியதுதான். கொஞ்சம் லேட்டுதான். ஆனாலும் எழுதியது வேஸ்டாகக் கூடாது என்பதற்காக பதிவிடுகிறேன்

No comments:

Post a Comment