Saturday, May 18, 2019

மோடி அவ்வளவு முட்டாளில்லை . . .




மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் நடைபெற்ற முதலும் கடைசியுமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் வாயே திறக்காமல் இருந்ததையும் அனைத்து கேள்விகளுக்கும் அமித் ஷாவே பதிலளித்துக் கொண்டு இருந்ததையும் எல்லோரும் கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன் மௌனத்தின் மூலம் மோடி ஒரு செய்தியை மிகவும் அழுத்தமாக தெரிவித்துள்ளார் என்பதை ஏன் கிண்டலடித்தவர்கள் புரிந்து கொள்ள்வில்லை என்று தெரியவில்லை.

அவரது மேக- ரேடார் ஆராய்ச்சிக்குப் பிறகு எல்லோரும் அவரை அடி முட்டாள் என்று போட்டுத்தள்ளுவது அவருக்கு மட்டும் தெரியாதா என்ன?

“ஏற்கனவே ஒரு பேட்டி அளித்து மாட்டிக் கொண்டு முழிப்பது போதாதா? மீண்டும் எதையாவது உளறி வைத்து அதைப் பிடித்துக் கொண்டு அடித்தால் உடம்பு தாங்குமா? அதனால் வாய் திறக்காமல் இருப்பது நல்லது”

என்று அவர் அமைதியாக இருந்து விட்டார்.

“தான் வாய் திறந்தால் மாட்டிக் கொள்வோம்” என்ற அளவிற்கு யோசிக்க தெரிந்த மோடியை அடி முட்டாள் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

ஆம்

அதனால் அந்த “அடி” என்பதை மட்டும் எடுத்து விடலாம்.




No comments:

Post a Comment