Wednesday, May 29, 2019

மோடி பேசிய உண்மை, அதிசயமாய்



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களோடு தொடர்பில் உள்ளார்கள். மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்னார்.

குதிரை பேர முயற்சி, ஆணவம், மிரட்டல் என்றுதான் அப்போது பார்க்கப்பட்டது.

ஆனால் மோடி அபூர்வமாக சொன்ன உண்மை அது என்பது நேற்று திரிணாமுல் எம்.எல்.ஏ க்கள் இருவர் பாஜகவில் சேர்ந்த போதுதான் புரிந்தது.

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ வோடும் தொடர்பில் உள்ளோம் என்று சொல்லியிருந்தால் அந்த துரோகியை முன் கூட்டியே நீக்கி இருந்திருக்கலாம்.

இன்னும் ஏழு கட்ட இழுப்பு வேலை இருப்பதாக சொல்லியுள்ளார்கள். 

மேற்கு வங்கத்தில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ?

2 comments:

  1. வெஸ்ட் வங்கத்தில் பாஜக வுக்கு போடும் படி கம்யூ தோழர்கள் பல இடங்களில் சொல்லி இருக்கின்றார்கள்
    அது மட்டுமல்ல மம்தாவின் வாக்கு வங்கி சிதையவில்லை
    கம்யூக்களின் வாக்கு வங்கியே சிதைந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. பொய்யான வதந்தி அது

      Delete