Friday, May 24, 2019

கோவை வெற்றியும் சாதாரணமானதல்ல




கோவை மக்களவைத் தொகுதியில் தோழர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியும் நிறைவும் தருகிற வெற்றி.

கோவையின் காற்றில் கூட மத வெறி நச்சை கலந்தவர்கள் சங்கிகள். ஒரு பக்கா கிரிமினலான சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அந்த தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போதே மனதிற்குள் ஒரு சின்ன கலக்கம் இருக்கத்தான் செய்தது.

சசிகுமார் என்பவர் அசிங்கமான காரணத்தால் அவர்கள் ஆட்களாலேயே கொல்லப்பட்டிருந்தாலும் அந்த மரணத்தை பயன்படுத்தி கலவரம் நடத்தியவர்கள் அண்டா பிரியாணி திருடர்கள். கலவரம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள், செய்து கொண்டே இருப்பவர்கள்.

தேர்தல் ஆணையத்தின் கூட்டணியோடு அனைத்து அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டு காயிர் போர்ட் சேர்மனாக ஊழல் செய்த சி.பி.ஆரை வெற்றி பெற வைக்க முயற்சிப்பார்கள் என்பதனால் ஏற்பட்ட கலக்கம்.

தண்ணீர் காண்ட்ராக்ட்  எடுத்துள்ள பன்னாட்டு கம்பெனி, யானை வழிப்ப் பாதை உள்ளிட்ட வன நிலங்களை ஆக்கிரமித்துள்ள சாமியார்கள் மற்றும் கல்வித் தந்தைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோவைக்கு மக்களவை உறுப்பினராக வரக்கூடாது என்று துடிப்பார்கள்.

இத்தனையையும் மீறி தோழர் பி.ஆர்.நடராஜன் ஒரு லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சாதரண விஷயமா என்ன?

ஏற்கனவே மக்களவை உறுப்பினராக தடம் பதித்த தோழர் பி.ஆர்.நடராஜன் அவர்களின் பணி மீண்டும் சிறக்க வாழ்த்துக்கள்


1 comment: