Saturday, May 11, 2019

நீங்கள் தந்த 15 லட்சம்





சற்று முன் தான் கவனித்தேன்.

வலைப்பக்கத்திற்கான பார்வைகளின் (HITS) எண்ணிக்கை பதினைந்து லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

முக நூலுக்கு லைக்கும் வலைப்பக்கத்திற்கு ஹிட்டும் முக்கியம்.

மோடி வாக்குறுதி அளித்த பதினைந்து லட்சத்தை தரவில்லை. நான் கேட்காமலேயே பதினைந்து லட்சத்தை அளித்த அனைத்து  நண்பர்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

2009 ம் வருடம் துவங்கினாலும் அந்த வருடம் வெறும் இரண்டே இரண்டு சிறிய பதிவுகளோடு அந்த ஆண்டு முடிந்தது. பிறகு 2010 ம் ஆண்டு அவ்வப்போது எழுதுவது என்று ஆரம்பித்து 2011 ம் ஆண்டு முதல் அன்றாடம் எழுதத் தொடங்கினேன்.

கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு பதிவுகள் என்று எழுதக் கூடிய அளவிற்கு நாட்டில் நிகழ்ச்சிப் போக்குகள் நடந்து கொண்டிருக்கிறது. பலவற்றை எழுதுவதற்கான நேரம் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

பெரும்பாலும் அரசியல் பதிவுகள், அதிலும் இடதுசாரிக் கண்ணோட்டத்துடனான பதிவுகள்தான் என்ற போதிலும் வலைப்பக்க வாசிப்பாளர்கள் அளிக்கும் ஆதரவு மகத்தானது. மகிழ்ச்சியளிக்கிறது. அதனால்தான் பதினைந்து லட்சம் என்ற இடத்திற்கு வர முடிந்துள்ளது.

அனாமதேயக் கொசுத்தொல்லை கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.  முகத்தை மறைத்துக்கொண்டு முதுகில் குத்துவது என்பது ஒரு விதமான மன வியாதி என்ற புரிந்து கொண்டதால் அது பற்றி கவலை இல்லை. அவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

நீங்கள் அளித்துள்ள மகத்தான ஆதரவு தொடர்ந்து எழுத உற்சாகம் அளித்துள்ளது. எந்த சமரசமும் இல்லாமல் உறுதியோடு எழுதிக் கொண்டே இருப்பேன்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் மனமார்ந்த நன்றி


6 comments:

  1. Advance wishes for reaching One crore before 2022!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழா.
      ஆனா அந்த அளவெல்லாம் சாத்தியமில்லை

      Delete
  2. வாழ்த்துகள் நண்பரே
    தங்களின் சீரிய எழுத்துப் பணி தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. உற்சாகமளிக்கும் வார்த்தைகள்

      Delete
  3. உங்கள் பணி மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை.

    ReplyDelete