Monday, April 3, 2017

அவன் நாயென்றதால் . . . .இவன் பன்றி



ரவீந்திர சவான் என்ற மஹாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ ரவீந்திர சவான் என்பவன் தலித் மக்களை பன்றி என்று வர்ணித்துள்ளான். அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் ஒரு விழாவில் "சாக்கடையில் கிடக்கும் பன்றிகளைப் போன்ற தலித்களை முன்னேற்ற பிரதமரும் முதல்வரும் பாடுபடுகிறார்கள்"  என்று பேசியுள்ளான். இதனை அந்த முதல்வரும் கேட்டு ரசித்துள்ளார்.

ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் கொளுத்தப்பட்ட போது "நாய்களின் மீது கல்லடி படுவதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்று திமிரோடு பேசிய சர்ச்சைக்குரிய முன்னாள் ராணுவ தளபதியும் இந்நாள் அமைச்சருமான வி.கே.சிங் இன்னும் மத்திய அமைச்சராகவே தொடர்வதால் ரவீந்திர சவானுக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு வந்துள்ளது. 

ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையே காரின் சக்கரத்தில் சிக்கிய நாயின் மகன் என்று வர்ணித்த மோடியின் கட்சிக்காரர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

வி,கே.சிங்கிற்கு எதிராக அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை. அன்று தேசம் தழுவிய எதிர்ப்பு இருந்து அந்த மனிதனின் பதவியைப் பறித்திருந்தால் இன்று ரவீந்திர சவானுக்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. 

ரவீந்திர சவானுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்து அவனது எம்.எல்.ஏ பதவியைப் பறித்திட வேண்டும். மன்னிப்பிற்கெல்லாம் தகுதியானவன் அல்ல. 

மாட்டை மட்டுமே பிரதானமாகக் கருதுகிற பாஜக கட்சியில் மனிதர்களுக்கு மதிப்பு கிடையாது. 

பின் குறிப்பு : ஒரு மத்திய அமைச்சரையும் எம்.எல்.ஏ வையும் ஒருமையில் அழைப்பது சரியல்ல என்று மொட்டைக் கடிதாசு தம்பி ஒன்று அனாமதேயமாக நாகரீகம் சொல்லிக் கொடுக்க வந்து விடும். மனிதர்களை இழிவுபடுத்தும் அவர்களிடமோ, மொட்டைக் கடிதாசு பேர்வழிகளிடமோ நாகரீகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முன் கூட்டியே சொல்லிக் கொள்கிறேன். 

1 comment:

  1. அவன்களுக்கு இந்த மரியாதையே மிகை!

    பி.கு: அவர்கள் எனக் குறிப்பிடும் தகுதி இல்லாததால் இலக்கண நெறி மீறி அவன்கள் எனக் குறிப்பிட வேண்டியதாகிறது. தமிழன்னை பொறுத்தருள்க!

    ReplyDelete