Tuesday, October 21, 2014

தமிழ்மணம் தடை செய்யாதா?

 

தமிழ் மணத்தின் இன்றைய சூடான இடுகைகள் என்ன என்று இப்போது பார்த்தேன்.  மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

முப்பது சூடான இடுகைகளில் பாதிக்கும் மேல் பாலியல் தொடர்பானதே.

ம்ஞ்சள் பத்திரிக்கைகளின் புதிய வடிவமாக சிலர் இணைய வலைப் பக்கங்களை பயன்படுத்துகிறார்கள் போலும். இந்த பதினாறு இடுகைகளை எழுதியுள்ளது என்னமோ மூன்று பேர்தான். அதில் ஒருவர் பெயர் ஜெய காந்தன் என்று இருப்பது இன்னொரு கொடுமை.

த்மிழ் மணம் நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. 

இது போன்ற  வலைப்பக்கங்களை தமிழ்மணத்திலிருந்து அகற்றாமல் "சூடான இடுகைகள்" என்ற அந்தஸ்து தருவது நியாயமில்லை.

உடனடியாக நடவடிக்கை தேவைப்படுகிறது.

8 comments:

  1. ஏனோ தெரியவில்லை. இந்தக் குறைபாடுகளைப் பற்றிப் பதிவர்கள் எழுதும் எதையுமே தமிழ்மண அட்மின் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணமே புரியவில்லையே ... ஏனிந்த கடும், கண்டிப்புக்குரிய மெளனம் ? இதுவரை அவர்களிடமிருந்து எந்த வித பதிலும் யாருக்கும் இல்லை. வெறுப்பாயுள்ளது.

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன். பெரும்பாலான இடுகைகள் பாலியல் குறித்தே வருகின்றன. அவர்கள் இதற்கென ஒரு தனி வலைப்பக்கம் ஆரம்பித்து அங்கே சென்று விட்டால் நலம். பெண்கள் இளவயது நண்பர்கள் வரும் ஒரு வலைத்தளம் இவ்வாறு சூடான இடுகைகள் என்று தனியே கட்டம் கட்டி பாலியல் பதிவுகளை ஆதரிப்பதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை.

    ReplyDelete
  3. கொஞ்ச நாளா இந்த கொடுமை கூடிகிட்டே வருகிறது தோழர்.

    ReplyDelete
  4. தமிழ் மணம் நாறிப்போய் ரொம்ப நாளாகிறது!

    ReplyDelete
  5. தமிழ் மண நிர்வாகம் அவசியம் கவனம் செலுத்த வேண்டும் நண்பரே

    ReplyDelete
  6. வணக்கம்
    நிச்சயம் உரிய நடிக்கை எடுக்க வேண்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம்
    நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete