Saturday, October 18, 2014

முதலில் தாடி, அடுத்து மொட்டை - தமிழக அமைச்சர்கள்?




இன்றைய ஜூனியர் விகடன் செய்திப் படி முதல்வர் ஓ.பி.எஸ்  வழியில் அனைத்து அமைச்சர்களும் தாடி வளர்ப்பதாகவும் அதிகமான தாடி அமைச்சர்கள் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் அடையும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

மம்மி ரிடர்னாவதால் இனி தாடிக்கு வேலை இல்லை.

அம்மா வெளியே வந்ததும் திருப்பதி போய் மொட்டை போடுவதாக ஓ.பி.எஸ் சொல்லியுள்ளாராம். நிச்சயம் அதைச் செய்வார்.

முதல்வர் வழியில் மற்ற அமைச்சர்களும்  நிச்சயம் மொட்டை அடித்துக் கொள்ளப் போகிறார்கள். அப்போதுதான் அவர்கள் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முடியும்.

ஆக  தாடி அமைச்சர்கள் என்ற பெருமைக்குப் பதிலாக மொட்டை அமைச்சர்கள் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைக்கப் போகிறது.

இதில் பாவம் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா. 

அவர்கள் வேறு விதத்தில்தான் த்ங்களின் விசுவாசத்தை காண்பிக்க முடியும்.....

5 comments:

  1. அது சரி.. கவனித்தீர்களா? ஜூ வி..யின் திடீர் நியாயவாதி ஸ்வரூபம். தினமலர்.. நாளிதழின் திடீர் பி ஜே பி பாசம்..
    Jumping off the sinking ship?

    உலகத்திலேயே முதுகெலும்பில்லாத Selfish ஜந்துக்கள் என்றால் நம் பத்திரிகை ஆசிரியர்கள்தான்!

    ReplyDelete
  2. how to scold them?

    ReplyDelete
  3. வளர்மதி மற்றும் கோகுல இந்திரா நிச்சயம் மொட்டை அடித்துக் கொள்ளப் போகிறார்கள். அப்போதுதான் அவர்கள் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முடியும்..

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது சரிதான் பந்து சார். ஊடக தர்மம் என்பது ஊடக சந்தர்ப்பவாதமாகி வெகு காலமாகி விட்டது. ஆனால் தினமலரின் பாஜக பாசம் புதிதல்லவே

    ReplyDelete
  5. ஒரு அமைச்சராவது தீக்குளித்து விசுவாசம் காட்ட மாட்டாங்களா? தொண்டர்களின் தீக்குளிப்பு கேள்விப்பட்டு சலித்துவிட்டது. ஒரு மாறுதலுக்காகவாவது ஒரு அமைச்சர் தீக்குளித்தால் குறைந்தா போய்விடுவார்கள். படிக்கச் சந்தோசமாக இருக்குமே!
    யாராவது அவர்களுக்கு எடுத்துச் சொல்ல மாட்டார்களா?

    ReplyDelete