Thursday, March 1, 2012

காவல்துறைக்கு புதிய சீருடை



வாச்சாத்தி

காக்கிச்சட்டையின்
கறுப்புப் பக்கத்தை
சிவப்புச் சட்டையின்
போராட்டம்
வெளிச்சம் போட்டுக் காட்டியது
உயர்ந்த கைகளின் வீரம்
காவலர் கைகளுக்கு
விலங்கு மாட்டியது.
கம்பீரமாய் திரிந்தவரை
முக்காட்டுக்குள்
ஒளிய வைத்தது.
தாமதமாய் வந்தாலும்
நீதி இறுதியில் வென்றது.
தீர்ப்புக்கள் வந்தாலும்
சிறைகள் நிரம்பினாலும்
திருந்திட மாட்டோம் என
திருக்கோயிலூர் சம்பவம்
தெளிவாய் சொன்னது,
தொடரும் எங்கள்
போராட்டம். . .
கைகளுக்கு விலங்கும்
முகத்தை மூட துணிகளும்
உற்பத்தியாகட்டும்
காவல்துறையின்
புதிய சீருடையாக



(எங்கள் சங்கத்தின் மகளிர் மாநாட்டு அறிக்கைக்காக எழுதியது)

1 comment:

  1. அருமையான கவிதை.
    கடைசி வரி சவுக்கடி

    ReplyDelete