Wednesday, March 28, 2012

தளபதி, தல, மந்திரி – சில கேள்விகள், ஒரு பதில்





ராணுவத் தளபதிக்கு சில கேள்விகள் :

உங்களை எழுத்து பூர்வமான புகார் கடிதம் கொடுக்குமாறு ராணுவ அமைச்சர் சொன்ன பின்பும் அப்படி கொடுக்காதது ஏன்?

அப்படியென்றால் முறையான விசாரணை செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லையா?

அல்லது முறையான விசாரணை நடக்கும் என்று நம்பிக்கை கிடையாதா?

ஒரு வேளை உங்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த புகாரை நீங்கள் தெரிவித்திருப்பீர்களா?

ராணுவ மந்திரி அந்தோணிக்கான கேள்விகள் :

ராணுவ தளபதி ஒரு அதிர்ச்சியான தகவல் தருகின்றார். எழுத்து பூர்வமான புகார் கொடுத்தால்தான் விசாரணை செய்வீர்களா ?

அப்படி அலட்சியப் படுத்த வேண்டிய சாதாரண விஷயம்தானா இது?

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் சாதாரண மொட்டைப் பெட்டிஷன் அடிப்படையிலேயே விசாரணை நடைபெறும் போது,

ராணுவ தளபதி சொல்வதற்கு ஒரு மொட்டை பெட்டிஷனுக்கான மரியாதை கூட கிடையாதா?

நாட்டின் “தல” மன்மோகன் சிங்கிற்கான கேள்வி :

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

இதற்கு மன்மோகன் என்ன பதில் சொல்வார் என்று எனக்கு தெரியும்.

அவர் பதில்  எனக்கு எதுவும் தெரியாது ”

No comments:

Post a Comment